குறிப்பாக கலாச்சாரம், சமூக நம்பிக்கைகள், தனிப்பட்ட நம்பிக்கைகள் மற்றும் அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையிலும் இதைப் பார்க்க வேண்டியுள்ளது. கவிதை இயற்றுவது, நடனம் ஆடுவது, பாடல் பாடுவது போல கலைநயம் மிகுந்த விஷயமாக சிலர் இதை பார்க்கின்றனர். சிலர், வாழ்வில் உள்ள மற்ற விஷயங்களை போல இதுவும் ஒரு அங்கம் என்று சாதாரணமாக கடந்து செல்கின்றனர். அதே சமயம், தாம்பத்ய உறவில் ஈடுபட இருப்பவர்கள் கீழ்காணும் விஷயங்களை தங்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். பாதுகாப்பான முறையில், குதூகலமான உறவை கொண்டாட இவை அடிப்படையாக அமையும்.
கருத்தொற்றுமை : பாலியல் உறவு என்பது வெறுமனே இரு உடல்கள் சேரும் நிகழ்வு அல்ல. இரு மனங்களும் சங்கமிக்க வேண்டும். இருவருக்குமே மனதில் ஆர்வமும், ஏக்கமும் இருக்க வேண்டும். யாரேனும் ஒருவருக்கு மன விருப்பம் இல்லை என்றாலும் கூட இந்த நடவடிக்கை திருப்திகரமானதாக அமையாது. இருவரின் ஆசைகளுக்கும் மதிப்பு அளிக்க வேண்டும்.
முன் விளையாட்டு : ரெஸ்டாரண்ட் செல்லும் நீங்கள் விருப்பமான உணவுகளை ஆர்டர் செய்துவிட்டு, ஒரு சூப் அருந்தி உங்கள் உடலையும், மனதையும் தயார் செய்து கொள்கிறீர்கள் அல்லவா! அதேபோல தான் இல்லற வாழ்க்கையும் கூட. பிரதான விளையாட்டில் இறங்கும் முன்பாக முன் விளையாட்டுகளில் ஈடுபடுவது உங்களின் பிணைப்பை அதிகரிக்கும்.
உணர்ச்சிவசப்பட வேண்டாம் : தாம்பத்ய உறவின்போது உணர்ச்சி வசத்துடன் செயல்படுவது உங்கள் அனுபவத்தை பாதிக்கக் கூடும். ஸ்ட்ரெஸ் மிகுந்த மனநிலை, கவலை நிறைந்த அல்லது வெறுப்பு நிறைந்த சூழலில் இதை முயற்சிக்க வேண்டாம். கொஞ்சம் நேரமெடுத்து அதற்கெல்லாம் தீர்வு கண்ட பிறகு இந்த நடவடிக்கையில் நீங்கள் இறங்கலாம்.