தம்பதியர்களுக்கு இடையே கருத்தொற்றுமை இல்லை என்ற சூழலிலும், மகிழ்ச்சியான வாழ்க்கை என்ற சூழலிலும் அவர்கள் முறைப்படி விவகாரத்து பெற்று, புதிய வாழ்க்கையை அமைத்துக் கொள்வதற்கான வழிமுறைகள் நம் இந்திய சட்டங்களில் உள்ளன. சமூகமும் இதை ஏற்றுக் கொள்கின்றன. ஆனால், திருமண வாழ்க்கையில் எந்தவித பிரச்னையும் இல்லாதபோதே கூடுதல் சபலத்தின் காரணமாக வேறொரு உறவை வளர்த்துக் கொள்வதில் பலரும் ஆர்வம் காட்டுகின்றனர்.
இதில், 25 முதல் 50 வயதுக்கு உட்பட்ட திருமணமான நபர்கள் 1,500 பேரிடம் கேள்விகள் முன்வைக்கப்பட்டன. இதில், 82 சதவீதம் பேர் ஒற்றை துணையுடன் வாழ்க்கையை நேர்மையாக வாழுவது சாத்தியம் என்று பதில் அளித்துள்ளனர். அதே சமயம், 44 சதவீதம் பேர் ஒரே சமயத்தில் இருவருடன் வாழ்க்கை நடத்தினாலும் மகிழ்ச்சி குறையாது என்று கூறியுள்ளனர்.
கவன ஈர்ப்பு : திருமண வாழ்க்கையில் தம்பதியர் இருவரும் பரஸ்பரம் ஒருவருக்கு, ஒருவர் ஆறுதலாகவும், அக்கறையாகவும் இருக்க வேண்டும். அத்துடன் உடல் ரீதியிலான நெருக்கமும் அவசியமாகிறது. ஆனால், இந்த விஷயங்களில் தன்னுடைய பார்ட்னர் தன்னை புறக்கணிப்பதாக நினைக்கின்றபோது, அவை கிடைக்கும் இடங்களில் அவர்கள் மனதை பறி கொடுக்கின்றனர்.
புதிய ரொமான்ஸ் : சிலர் எப்போதுமே காதல் மன்னன் அல்லது காதல் ராணி என்ற நினைப்பிலேயே வலம் வருகின்றனர். ஏற்கனவே திருமணம் ஆன நிலையில், வேறொரு நபர்களை சைட் அடிப்பதற்கும், அவர்களை ரொமான்ஸ் உணர்வுடன் அணுகுவதற்கும் இவர்கள் தயங்குவதில்லை. கொண்டாட்டம், குதூகலம் ஆகிய இரண்டும் தான் இவர்களது நோக்கமாக இருக்கிறது.
அழகின் மீது கர்வம் : தான் ஒரு பேரழகனாக அல்லது பேரழகியாக இருக்கிறோம் என்ற சிந்தனை சிலருக்கு இருக்கிறது. இப்படியொரு அழகில் இருக்கும் தன்னை வேறொருவர் ரசிப்பதும், அவர்களுடன் உடல் தேவைகளை பகிர்ந்து கொள்வதும் மிக இயல்பானது எனக் கருதுகின்றனர். குறிப்பாக, மற்றவர்களை பாலியல் ரீதியாக தூண்டுவதை இவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் செய்கின்றனர்.