முகப்பு » புகைப்பட செய்தி » ஓணம் பண்டிகைக்கான ரங்கோலி டிசைன் கோலங்கள் - பூக்களால் அலங்காரம்!

ஓணம் பண்டிகைக்கான ரங்கோலி டிசைன் கோலங்கள் - பூக்களால் அலங்காரம்!

Onam 2022 | ஓணம் திருநாளில் பொதுமக்கள் அனைவரும் புத்தாடை உடுத்தி, இனிப்புகளை பரிமாறிக் கொள்கின்றனர். பொங்கல் திருநாளைப் போலவே நெல் மற்றும் அரிசி ஆகியவற்றை இறைவனுக்கு படையலிட்டு வழிபாடு செய்கின்றனர்.

  • 110

    ஓணம் பண்டிகைக்கான ரங்கோலி டிசைன் கோலங்கள் - பூக்களால் அலங்காரம்!

    தமிழகத்தில் தை மாதத்தில் அறுவடை திருநாளாம் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுவதை போன்று கேரளத்தில் அறுவடை திருநாள் என்பது ஓணம் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகைக்கு நாம் வண்ணக் கோலமிடுவதைப் போலவே, ஓணம் பண்டிகைக்கு கேரள மக்கள் வண்ணமயமான மலர்களைக் கொண்டு பூக்கோளம் இடுகின்றனர். இந்தக் கோலம் அன்றி ஓணம் பண்டிகை சிறப்பு பெறாது.

    MORE
    GALLERIES

  • 210

    ஓணம் பண்டிகைக்கான ரங்கோலி டிசைன் கோலங்கள் - பூக்களால் அலங்காரம்!

    10 நாட்கள் கொண்டாட்டம் : ஓணம் பண்டிகையின் கொண்டாட்டம் என்பது 10 நாட்களைக் கொண்டதாகும். இந்த நாட்களில் படகுப் போட்டி, புலியாட்டம், பூக்கோலம், இறை வழிபாடு ஆகிய மரபுகள் கடைப்பிடிக்கப்படுகின்றன.

    MORE
    GALLERIES

  • 310

    ஓணம் பண்டிகைக்கான ரங்கோலி டிசைன் கோலங்கள் - பூக்களால் அலங்காரம்!

    அறுவடை திருநாள்
    ஆண்டுதோறும் சிங்கம் மாதத்தின் 22ஆம் நாளில் வரும் நட்சத்திர திருவோணம் நாளில் இந்த ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனை அறுவடை திருநாளாக கடைப்பிடிக்கின்றனர். மேலும், மகாபலி அரசர் கேரளம் திரும்பியதன் வெற்றி தினமாகவும் இதை கடைப்பிடிக்கின்றனர்.

    MORE
    GALLERIES

  • 410

    ஓணம் பண்டிகைக்கான ரங்கோலி டிசைன் கோலங்கள் - பூக்களால் அலங்காரம்!

    மகாபலி
    கேரளாவின் பெரும் பகுதியை முன்னர் ஆட்சி செய்தவர் மகாபலி ஆவார். அவர் நாடு திரும்பும் நாளில் வரவேற்கும் விதமாக பூக்கோலமிடப்பட்டது.

    MORE
    GALLERIES

  • 510

    ஓணம் பண்டிகைக்கான ரங்கோலி டிசைன் கோலங்கள் - பூக்களால் அலங்காரம்!

    வாமனர் வழிபாடு
    மகாபலி என்னும் மகாவேலி அரசர் ஒவ்வொரு ஆண்டும் ஓணம் பண்டிகையின்போது , விஷ்ணுவின் 5ஆம் அவதாரமான வாமனரை வழிபடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

    MORE
    GALLERIES

  • 610

    ஓணம் பண்டிகைக்கான ரங்கோலி டிசைன் கோலங்கள் - பூக்களால் அலங்காரம்!

    பக்திக்கு சோதனை
    வாமனர் மீது மகாபலி கொண்டிருந்த தீவிர பக்தியை சோதிக்கும் விதமாக அவரை படல கோளாவிற்கு விஷ்ணு அனுப்பி வைத்தாரம். இருப்பினும் ஆண்டுக்கு ஒருமுறை நாடு திரும்பும் வகையில் வரம் பெற்றிருந்தார்.

    MORE
    GALLERIES

  • 710

    ஓணம் பண்டிகைக்கான ரங்கோலி டிசைன் கோலங்கள் - பூக்களால் அலங்காரம்!

    ஒவ்வொரு நாளும் பூக்கோலம்
    ஓணம் பண்டிகையின் 10 தினங்களுக்கும் ஒவ்வொருவரின் வீட்டிலும் பூக்கோலம் இடப்படும். வெவ்வேறு கோலங்களை வடிவமைத்து அசத்துவார்கள்.  

    MORE
    GALLERIES

  • 810

    ஓணம் பண்டிகைக்கான ரங்கோலி டிசைன் கோலங்கள் - பூக்களால் அலங்காரம்!

    வட்ட வடிவ பூக்கோலம்
    பெரும்பாலும் பூக்கோலம் என்பது வட்ட வடிவில் இருக்கும். அதனுள் வண்ணமயமான அலங்காரங்களை செய்திருப்பார்கள். கோலத்தை சுற்றியிலும் இனிப்புகள், மயிலிறகு உள்ளிட்டவற்றை வைத்து வழிபாடு நடத்துகின்றனர்.

    MORE
    GALLERIES

  • 910

    ஓணம் பண்டிகைக்கான ரங்கோலி டிசைன் கோலங்கள் - பூக்களால் அலங்காரம்!

    வெவ்வேறு பூக்கள்
    கோலத்தி பயன்படுத்தப்படும் பூக்கள் ஒவ்வொரு நாளும் மாறுபடும். ஆதம் என்ற முதல் நாளில் தொடங்கி, திருவோணம் என்ற 10ஆம் நாளில் இது நிறைவுபெறும். 10ஆம் நாள் விழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

    MORE
    GALLERIES

  • 1010

    ஓணம் பண்டிகைக்கான ரங்கோலி டிசைன் கோலங்கள் - பூக்களால் அலங்காரம்!

    குத்துவிளக்கு ஏற்றுதல்
    இந்த ஆண்டு ஓணம் பண்டிகை ஆகஸ்ட் 30ஆம் தேதி தொடன்கியது. செப்டம்பர் 8ஆம் தேதி வியாழக்கிழமை நிறைவு பெறுகிறது. விழாவை சிறப்பிக்கும் விதமாக குத்துவிளக்கு ஏற்றப்படுகிறது. ஓணம் பண்டிகை காலத்தில் கேரளாவில் பூக்களின் விற்பனை விறுவிறுப்பாக நடைபெறும்.

    MORE
    GALLERIES