முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » வீட்டில் புதிய தோட்டம் வைக்க போறீங்களா? அப்ப வாஸ்து படி செய்யுங்க வீட்டில் செல்வம் பெருகும்..

வீட்டில் புதிய தோட்டம் வைக்க போறீங்களா? அப்ப வாஸ்து படி செய்யுங்க வீட்டில் செல்வம் பெருகும்..

நீங்கள் உங்கள் வீட்டில் மரம், செடி உள்ளிட்டவற்றை வளர்க்க விரும்பினால் உங்கள் தோட்டம் வாஸ்து இணக்கமாக இருக்க சில உதவிக்குறிப்புகளை தெரிந்துக்கொள்ளுங்கள்..

  • 18

    வீட்டில் புதிய தோட்டம் வைக்க போறீங்களா? அப்ப வாஸ்து படி செய்யுங்க வீட்டில் செல்வம் பெருகும்..

    வாஸ்து சாஸ்திரத்தின் படி உங்கள் வீட்டு தோட்டத்தை வடிவமைப்பது உங்களுக்கு ஏராளமான செல்வத்தை பெற்றுத் தருவதோடு, உங்களில் நல்ல பாசிட்டிவான மனநிலையையும் உருவாக்கும். வீட்டில் ஒரு தோட்டம் அமைப்பதன் மூலம் ஆரோக்கியத்தையும் செழிப்பையும் பெறுவதை உறுதி செய்ய முடியும். வாஸ்து சாஸ்திரம் மற்றும் பாரம்பரிய இந்து கட்டிடக்கலை அமைப்பு, இது போன்ற இயற்கை அழகை அதிகரிக்க உதவும் பல வழிமுறைகளை கொண்டுள்ளன. நீங்கள் உங்கள் வீட்டில் மரம், செடி உள்ளிட்டவற்றை வளர்க்க விரும்பினால் உங்கள் தோட்டம் வாஸ்து இணக்கமாக இருக்க சில உதவிக்குறிப்புகளை பின்வருமாறு காணலாம்.

    MORE
    GALLERIES

  • 28

    வீட்டில் புதிய தோட்டம் வைக்க போறீங்களா? அப்ப வாஸ்து படி செய்யுங்க வீட்டில் செல்வம் பெருகும்..

    வாஸ்து சாஸ்திரத்தின் படி, தோட்டம் அமைக்கும் பகுதி பஞ்ச மகா பூதத்தின் ஐந்து கூறுகளில் ஒன்றை பிரதிபலிக்கிறது. அதன்படி நீங்கள் வீட்டின் தென்கிழக்கு அல்லது தென்மேற்கு திசையில் தோட்டத்தை அமைக்கும் போது அது பதற்றத்தை ஏற்படுத்தும்.

    MORE
    GALLERIES

  • 38

    வீட்டில் புதிய தோட்டம் வைக்க போறீங்களா? அப்ப வாஸ்து படி செய்யுங்க வீட்டில் செல்வம் பெருகும்..

    அதுவே வீட்டின் முன் பகுதியில் நீங்கள் மரம் அல்லது செடி நட நினைத்தால், அதை முறையாக செய்ய வேண்டும். ஏனெனில் வேப்பம் போன்ற ஒரு பெரிய மரத்தை நடும்போது, அது ஒருபோதும் பிரதான நுழைவாயிலைத் தடுக்கும் நிலையில் இருக்கக்கூடாது.

    MORE
    GALLERIES

  • 48

    வீட்டில் புதிய தோட்டம் வைக்க போறீங்களா? அப்ப வாஸ்து படி செய்யுங்க வீட்டில் செல்வம் பெருகும்..

    வாஸ்து சாஸ்திரத்தின் படி மேற்கு, தெற்கு மற்றும் தென்மேற்கு திசையில் தோட்டத்தின் சுவருடன் ஒரு மா, வேம்பு அல்லது வாழை போன்றவற்றில் ஏதேனும் ஒன்றை நடவு செய்ய பரிந்துரைக்கப்படுகிறது. இந்த பெரிய மரங்கள் முன் பகுதியை குளிர்வித்து நேர்மறை அதிர்வுகளை வீட்டிற்கு வழங்குகின்றன.

    MORE
    GALLERIES

  • 58

    வீட்டில் புதிய தோட்டம் வைக்க போறீங்களா? அப்ப வாஸ்து படி செய்யுங்க வீட்டில் செல்வம் பெருகும்..

    வடகிழக்கு பகுதியை ஓபனாக விடவேண்டும். சிறிய புதர் போல வளரும் செடிகளை கிழக்கு அல்லது வடக்கு திசையில் நட வேண்டும்.

    MORE
    GALLERIES

  • 68

    வீட்டில் புதிய தோட்டம் வைக்க போறீங்களா? அப்ப வாஸ்து படி செய்யுங்க வீட்டில் செல்வம் பெருகும்..

    வாஸ்துவின் படி, மரங்களுக்கும் பிரதான வீட்டிற்கும் இடையே கணிசமான தூரத்தை பராமரிக்க வேண்டும். காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மரத்தின் நிழல் வீட்டின் மீது விழக்கூடாது. அரச மரம் போன்ற பெரிய மரங்களை வீட்டிற்கு மிக அருகில் நடக்கூடாது என்று சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. ஏனெனில் அவற்றின் வேர்கள் கட்டிடத்தின் அடித்தளத்தை சேதப்படுத்தும். துரதிர்ஷ்டத்தைத் தவிர்க்க, புழுக்கள், பூச்சிகள், தேனீக்கள் அல்லது பாம்புகளை ஈர்க்கும் மரங்களை தோட்டத்தின் எந்த பகுதியில் வேண்டுமானாலும் நடலாம்.

    MORE
    GALLERIES

  • 78

    வீட்டில் புதிய தோட்டம் வைக்க போறீங்களா? அப்ப வாஸ்து படி செய்யுங்க வீட்டில் செல்வம் பெருகும்..

    பலர் தங்களது வீட்டில் துளசி செடி வைக்க விரும்புவர். துளசி செடி இந்து மதத்தின் படி தெய்வமாக போற்றப்படுகிறது. இந்த செடியை நட வேண்டிய சிறந்த இடம் கிழக்கில் உள்ளது. இதுதவிர அதிர்ஷ்டத்திற்காக வீட்டின் வடக்கு மற்றும் வடகிழக்கு திசைகளிலும் இதை நடலாம்.

    MORE
    GALLERIES

  • 88

    வீட்டில் புதிய தோட்டம் வைக்க போறீங்களா? அப்ப வாஸ்து படி செய்யுங்க வீட்டில் செல்வம் பெருகும்..

    இதுதவிர கற்றாழை போன்ற முட்கள் உள்ள தாவரங்கள் எதிர்மறை ஆற்றலைக் குறிக்கும் என்பதால் இதனை தோட்டத்தில் நட வேண்டாம். அதேபோல இந்த பூந்தொட்டிகளை அப்படியே தரையில் வைக்கக் கூடாது. அதேபோல கூட்டுச் சுவரில் மற்றும் வடக்கு, கிழக்கு அல்லது வடகிழக்கு திசையில் வைக்கக் கூடாது.

    MORE
    GALLERIES