மேலும் பெரும்பாலான செல்லப் பிராணிகள் அனைத்துமே எப்போதும் தங்கள் உரிமையாளர் தங்களுடனே இருக்க வேண்டும் என்று தான் விரும்பும். ஆனா சில தவிர்க்க முடியாத சூழல்களில் நமது செல்லப் பிராணிகளை மட்டும் வீட்டில் விட்டுவிட்டு எங்கேயும் வெளியே செல்லும் நிலை உண்டாகலாம். இது போன்ற சமயங்களில் அவைகள் ஏதேனும் விளையாட்டாக அறியாமல் செய்யும் சில விஷயங்களினால் அவைகளுக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புகள் உண்டு. வீடுகளில் உள்ள பொருட்கள் சேதம் அடைவதற்கும் வாய்ப்புகள் உண்டு. எனவே இது போன்ற சூழல்களில் கடைப்பிடிக்க வேண்டிய சில முக்கியமான வழிமுறைகளை பற்றி இப்போது பார்ப்போம்.
கலைப்படைய செய்து விடுங்கள்: நீங்கள் இன்று எங்கேயும் வெளியே செல்ல இருக்கிறீர்கள் என்றால், இன்றைய தினம் காலையிலேயே உங்களது செல்லப்பிராணியை பூங்காவிற்கு வாக்கிங் அழைத்துச் செல்வது மிகவும் நல்லது. மேலும் நாய்கள் பொதுவாகவே அதிகம் விளையாட விரும்பும். எனவே பூங்காவில் அவர்களுக்கு பிடித்த விளையாட்டுக்களை நன்றாக விளையாட விட்டு அவைகளை களைப்படையை செய்ய வேண்டும். இதுவே பூனை வளர்ப்பவர்கள், பூனைகளின் வேட்டையாடும் திறனை தூண்டி விடுவதற்காக சில விளையாட்டு சாமான்களை வாங்கி வைப்பதன், மூலம் பூனைகள் அதனுடன் விளையாடும், எனவே ஒரு கட்டத்தில் அவை மிகுந்த களைப்பாகி வேறு எந்த குறும்புத்தனமான காரியங்களிலும் ஈடுபடாது.
செல்லப் பிராணிகளுக்கான விளையாட்டு பொருட்கள்: செல்லப் பிராணிகளை மகிழ்ச்சியுடன் வைத்துக் கொள்வதற்கும் வீட்டில் உள்ள பொருட்களை சேதப்படுத்துவதில் இருந்து அவற்றின் கவனத்தை திசை திருப்புவதற்கும் செல்ல பிராணிகளுக்கான விளையாட்டு சாமான்கள் மிகவும் உதவிகரமாக இருக்கும். இன்று சந்தையில் பல்வேறு செல்லப் பிராணிகளுக்கான விளையாட்டு பொருட்கள் கிடைக்கின்றன. உணவு வகைகள் போன்ற விளையாட்டு சாமான்கள், செல்லப் பிராணிகளுக்கான பந்துகள் போன்றவை மிகவும் பிரபலமான விளையாட்டு பொருட்கள். அதைத் தவிர அட்டை பெட்டிகள், பேப்பர் பைகள் போன்றவையும் அவைகளுக்கும் மிகவும்பிடிக்கும். இவற்றை நீங்கள் வீட்டில் வாங்கி வைத்து விட்டு செல்வதின் மூலம் செல்ல பிராணிகள் இதனோடு அதிக நேரம் செலவிடும்.
அவைகள் உலவும் இடங்களை பூட்டி வைக்க வேண்டும்: நீங்கள் உங்கள் செல்லப் பிராணியை தனியாக வீட்டில் விட்டுவிட்டு செல்லும்போது மிகவும் விலைமதிப்பற்ற, எளிதில் உடைய கூடிய பொருட்கள் இருக்கும் இடங்களை பூட்டி வைப்பது நல்லது. முடிந்தவரை உங்கள் செல்லப் பிராணிகள் உலவும் இடத்தை சுருக்கி, அந்த இடத்தை காலியாக வைப்பது அவசியம்.
தனியாக இருப்பதை பழக்கமாக்குங்கள் : பூனை மற்றும் நாய்கள் எப்போதும் ஒரு குறிப்பிட்ட பழங்கந்தை திரும்பத் திரும்ப செய்வதில் மிகவும் ஆர்வம் உடையவை. ஆரம்பத்தில் ஒரு செல்லப் பிராணி வீட்டில் தனியாக விடுவது சற்று கடினமானதாக இருந்தாலும் போகப்போக அவை அதற்கு பழகிவிடும் எனவே ஆரம்பத்திலிருந்து முடிந்த அளவு அவைகளை வீட்டில் தனியாக இருப்பதற்கு பழக்கப்படுத்த வேண்டும்.