கோடை காலத்தில் அடிக்கடி தண்ணீர் குடிப்பது அவசியம். ஆனால் அந்த தண்ணீரை அசுத்தத்துடன் குடித்தால், அதுவே உங்களை நோய்வாய்ப்படுத்தும். வீடு, அலுவலகம், பள்ளி அல்லது பயணத்தின் போது தண்ணீர் பாட்டிலை எடுத்துச் செல்வது பொதுவானது. அவ்வாறு கொண்டு செல்லும் வாட்டர் பாட்டில்களை 2 நாட்களுக்கு ஒரு முறையாவது கழுவி சுத்தம் செய்து நன்கு வெயிலில் காய வைப்பது அவசியம். இதை சரியாக செய்யாவிட்டால் உள்ளே பாக்டீரியாக்களின் வளர்ச்சி அதிகரித்து நோய்களை உருவாக்கலாம். சிலருக்கு, பாட்டிலின் உள்ளே சுத்தம் செய்வது மிகவும் கடினமாக இருக்கும். எனவே மேலோட்டமாக கழுவிவிடுவார்கள். இதுவும் ஆபத்தனதே... எனவே பாட்டிலின் உட்புறத்தையும் சுத்தம் செய்ய இந்த டிப்ஸை டிரை பண்ணுங்க..