Health Benefit Of Coriander : கொத்தமல்லி சமையலறையில் காணப்படும் முக்கியமான பொருட்களில் ஒன்றாகும். கொத்தமல்லி தூள் அல்லது உலர்ந்த கொத்தமல்லி விதைகள் (coriander seeds) கிட்டத்தட்ட அனைவரின் சமையலறையிலும் இருக்கும். கொத்தமல்லி கிட்டத்தட்ட எல்லா காய்கறிகளிலும் பயன்படுத்தப்படுகிறது. கொத்தமல்லி இல்லாமல் எந்த குழம்பும் முழுமையடையாது.
கிரேவிக்களை தவிர, இது பல உணவுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் கொத்தமல்லி சுவையை சுவையாக மாற்றும் அதே வேளையில், அது ஆரோக்கியத்திற்கும் மிகவும் நன்மை பயக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா?.. ஹெல்த்லைனில் வெளியிடப்பட்ட செய்தியின்படி, செரிமானம் தொடர்பான பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு கொத்தமல்லி தண்ணீர் ஒரு வரப்பிரசாதம் என கூறப்படுகிறது. அந்தவகையில், கொத்தமல்லி தண்ணீர் எப்படி தயாரிப்பது, அதன் ஆரோக்கிய நன்மை என்ன என்பதை இந்த தொகுப்பில் காணலாம்.
கொத்தமல்லி தண்ணீர் எப்படி தயாரிப்பது ? : ஒரு பாத்திரத்தில் 4 ஸ்பூன் கொத்தமல்லி விதைகளை போடவும். இதையடுத்து, அந்த பாத்திரத்தில் 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும். தண்ணீர் நன்றக கொதித்ததும் அடுப்பை அணைத்துவிட்டு தண்ணீரை ஆரவடித்து வடிகட்டினால் மல்லி தண்ணீர் தயார். இதை முதல் நாள் இரவே ஊறவைத்தும் உபயோகிக்கலாம்.
உடலை நீரேற்றமாக வைத்திருக்க : கோடை காலத்தில் கொத்தமல்லி தண்ணீர் ஆரோக்கியத்தின் வரப்பிரசாதம். மல்லி தண்ணீரை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குறித்து வந்தால், உடல் நீரேற்றமாக இருக்கும். மேலும் இது, உடலுக்கு புத்துணர்ச்சியையும் ஆற்றலையும் தருகிறது. எனவே, கோடை காலத்தில் மல்லி தண்ணீர் குடிப்பது மிகவும் நல்லது.
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் : வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி தவிர, பல சத்துக்களும் கொத்தமல்லியில் காணப்படுகின்றன. கொத்தமல்லி பல வீடுகளில் மூலிகை தேநீர் மற்றும் டிகாக்ஷன் தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது. கொத்தமல்லி தண்ணீரை தொடர்ந்து குடித்து வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இதனை தினமும் உட்கொள்வதன் மூலமும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம்.