முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » அளவுக்கு அதிகமாக உணவில் உப்பு சேர்த்தால் என்ன நடக்கும் தெரியுமா?

அளவுக்கு அதிகமாக உணவில் உப்பு சேர்த்தால் என்ன நடக்கும் தெரியுமா?

உணவில் அதிகப்படியான சோடியம் உயர் இரத்த அழுத்தம், இதய நோய் மற்றும் பக்கவாதத்திற்கு வழிவகுக்கும். இது கால்சியம் இழப்பையும் ஏற்படுத்தும்

  • 19

    அளவுக்கு அதிகமாக உணவில் உப்பு சேர்த்தால் என்ன நடக்கும் தெரியுமா?

    “உப்பு இல்லா பண்டம் குப்பையில்” என்பார்கள். அதே சமயம் உப்பு அதிகமான பண்டங்களையும் சாப்பிட முடியாது. நாம் இயல்பாக சமைக்கும் உணவின் சுவையை அதிகரிக்க உப்பு சேர்க்கிறோம். சுவைக்கு மட்டும் அல்ல, உடல் ஆரோக்கியம் மற்றும் சரும ஆரோக்கியத்திற்கும் உப்பு பெரிதும் உதவியாக உள்ளது. எனினும், இந்த உப்பு உணவில் அதிகமானால் பல ஆரோக்கிய சிக்கல்கள் ஏற்படலாம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

    MORE
    GALLERIES

  • 29

    அளவுக்கு அதிகமாக உணவில் உப்பு சேர்த்தால் என்ன நடக்கும் தெரியுமா?

    இரத்த அழுத்த பிரச்னை : உணவில் உப்பு அதிகமாகும் போது, இரத்த நாளங்களின் உள்சுவரில் கொழுப்பு படியும் வாய்ப்பு அதிகரிக்கிறது. இந்த கொழுப்பு, இரத்த ஓட்டத்திற்கான பாதையை அடைத்து, இரத்த அழுத்த பிரச்னைகளுக்கு வழிவகுக்கிறது.

    MORE
    GALLERIES

  • 39

    அளவுக்கு அதிகமாக உணவில் உப்பு சேர்த்தால் என்ன நடக்கும் தெரியுமா?

    இதய நோய் : அதிகப்படியான உப்பு, இரத்த நாளங்களின் உள் சுவரில் ஏற்படும் கொழுப்பு அடைப்புக்கு வழிவகுக்கும் நிலையில், இந்த அடைப்பு தீவிரமாகி மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பும் அதிகரிக்கிறது.

    MORE
    GALLERIES

  • 49

    அளவுக்கு அதிகமாக உணவில் உப்பு சேர்த்தால் என்ன நடக்கும் தெரியுமா?

    உடல் எடை அதிகரிப்பு : உணவில் நாம் சேர்க்கும் அதிகப்படியான உப்பு, உடலில் சோடியம் மற்றும் கொழுப்பின் அளவை அதிகரிக்க செய்கிறது. இதன் காரணமாக உடலில் தேவையற்ற கெட்ட கொழுப்பு உண்டாகி உடல் பருமனுக்கு வழிவகுக்கிறது.

    MORE
    GALLERIES

  • 59

    அளவுக்கு அதிகமாக உணவில் உப்பு சேர்த்தால் என்ன நடக்கும் தெரியுமா?

    சிறுநீரக தொற்று : அதிகப்படியான உப்பின் நுகர்வு, உடலில் சோடியத்தின் அளவை அதிகரித்து சிறுநீரக கற்கள், சிறுநீரக பாதை தொற்று போன்ற பிரச்னைகளுக்கு வழிவகுக்கிறது. இந்த பிரச்னைகளை தடுக்க, உப்பின் பயன்பாட்டை குறைத்துக்கொள்வது நல்லது.

    MORE
    GALLERIES

  • 69

    அளவுக்கு அதிகமாக உணவில் உப்பு சேர்த்தால் என்ன நடக்கும் தெரியுமா?

    எலும்பு தேய்மானம் : உணவில் அதிகளவு சேர்த்துக்கொள்ளும் உப்பு, உடல் எலும்புகளின் வலிமை மற்றும் அடர்த்தியை குறைக்கும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த பாதிப்பு, ஆண்களை விட பெண்களுக்கே அதிகம் ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

    MORE
    GALLERIES

  • 79

    அளவுக்கு அதிகமாக உணவில் உப்பு சேர்த்தால் என்ன நடக்கும் தெரியுமா?

    மூளை செயல்பாடு குறைவு : உப்பின் அதிகப்படியான நுகர்வு மூளையில் உள்ள நியூரான்கள் தூண்டலுக்கு வழிவகுக்கிறது. இந்த தூண்டுதல் நிகழ்வு, மூளையின் திசுக்களை பாதித்து, மூளை செயல்பாட்டையும் பாதிக்கிறது.

    MORE
    GALLERIES

  • 89

    அளவுக்கு அதிகமாக உணவில் உப்பு சேர்த்தால் என்ன நடக்கும் தெரியுமா?

    தசை பிடிப்பு : அளவுக்கு அதிகமான உப்பின் நுகர்வு, நரம்பு மண்டலத்தையும், தசைகளின் ஆற்றலையும் பாதிக்கிறது. இதன் காரணமாக தசைபிடிப்பு மற்றும் தலைவலி போன்ற பிரச்னைகள் எழுகிறது.

    MORE
    GALLERIES

  • 99

    அளவுக்கு அதிகமாக உணவில் உப்பு சேர்த்தால் என்ன நடக்கும் தெரியுமா?

    அதிகப்படியான தண்ணீர் தாகம் : உப்பு அதிகம் சேர்க்கப்பட்ட உணவை சாப்பிடுகையில் அடிக்கடி தாகம் எடுக்கிறது. உப்பின் அதிகப்படியான நுகர்வு, உடலின் அதிகப்படியான நீர்போக்குக்கு வழிவகுக்கும் நிலையில் இந்த தண்ணீர் தாகம் அதிகம் ஏற்படுகிறது.

    MORE
    GALLERIES