இலவங்கப்பட்டை பாரம்பரியமான மசாலா வகைகளில் ஒன்று. இது சமையலில் வாசனைக்காக மட்டும் பயன்படுத்தப்படுவதில்லை. அதன் மருத்துவ குணங்களாலும் அதன் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. குறிப்பாக அசைவ உணவுகளை சமைக்கும்போது இலவங்கப்பட்டை சேர்க்கப்படுவதும் அஜீரணக் கோளாறுகளை தடுக்கத்தான். இப்படி பாரம்பரியமாக அதன் மருத்துவ குணங்களால் பெயர் பெற்ற இலவங்கப்பட்டை நீரிழிவு நோய்க்கும் மருந்தாக இருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.
வளர்ச்சிதை மாற்றத்தை வேகமாக நிகழ்த்துவதால் இதன் பலனை விரைவாக அனுபவிக்க முடியும். உடல் கழிவுகளை விரைவாக வெளியேற்றுகிறது. நச்சுத்தன்மையற்ற உடலை மேம்படுத்த உதவுகிறது. இந்த விஷயங்கள் உடலில் சிறப்பாக செயல்படும்போது இன்சுலின் சுரப்பும் சீராக இருக்கிறது. எனவே இரத்தத்தில் குளுக்கோஸ் அளவும் கட்டுப்பாட்டில் இருக்கிறது.
Accelerating the world's research என்னும் ஆய்வும் இதை நிரூபித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அந்த ஆய்வில் ஒரு கிராம் இலவங்கப்பட்டையை தினமும் உணவில் சேர்த்துக்கொண்டே வர டைப் 2 நீரிழிவு நோய் கட்டுப்பாட்டில் இருக்கும் என்று கூறியுள்ளது. எனவே நீங்கள் உணவிலோ அல்லது தண்ணீரில் ஊற வைத்தோ குடிக்கலாம். எனினும் நீங்கள் உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெற்ற பின் இதை பின்பற்றுவது நல்லது.