மழை காலம், பருவ மாற்றம் தொடங்கும்போது சளி, இருமல் ,காய்ச்சல் வருவது இயல்பு. ஆனால் அவை வைரஸ் தொற்றுகளாக இருப்பின் உடனடி சிகிச்சைகளை மேற்கொள்வது அவசியம். அப்படி தொற்றுகள் இல்லை சாதாரண இருமல் சளி தான் என்றாலும் அவை கட்டாயம் முன்று நாட்கள் அல்லது ஒரு வாரம் வரையிலும் நீடிக்கும். அந்த நாட்களில் உங்களை எப்படி பாதுகாப்பாக பராமரித்துக்கொள்வது என்று பார்க்கலாம்.
பயம் தேவையில்லை : சளி இருமல், காய்ச்சல் என பாதிக்கப்பட்டிருந்தால் அவற்றை எதிர்கொள்ளும் பக்குவத்தை தெரிந்துகொள்ளுங்கள். சாதாரண நாட்களை காட்டிலும் இந்த சமயத்தில்தான் உங்களுக்கு அதிக ஆற்றல் அவசியம். அப்போதுதான் தொற்றுகளை எதிர்த்து போராட முடியும். நிலைமை மோசமாக இருக்கும் சமயத்தில் பள்ளி, கல்லூரி அலுவலகத்திலிருந்து விடுமுறை கேட்டு வீட்டில் நன்கு ஓய்வு எடுங்கள்.
ஓய்வில் கவனம் : விடுமுறையில் வீட்டில் இருக்கும் போது தூங்குவதை மட்டுமே வேலையாக வைத்துக்கொள்ளாதீர்கள். அதேபோல் டிவி , செல்ஃபோன், லாப்டாப்புகள் பார்ப்பதைத் தவிருங்கள். வெளியேறும் சளியை அவ்வபோது வெளியேற்றிவிடுங்கள். இரவில் சளி , இருமல் அதிகமாகிறதெனில் தலையணையை உயர்த்திக்கொள்ளுங்கள். இல்லையெனில் தண்ணீர் தலைக்கு ஏறி சைனஸ் பிரச்னை வரும்.
தண்ணீர் குடியுங்கள் : நெஞ்சு சளி, தொடர் சளி இருப்பின் அதை தண்ணீரால் மட்டுமே கட்டுப்படுத்த முடியும். எனவே பாட்டில் நிறைய வெந்நீர் வைத்துக்கொண்டு அவ்வபோது குடித்துக்கொண்டே இருங்கள். உடலில் நீர் வற்றினால் தலைவலி, சோர்வு போன்றவை உண்டாகும். சோடா, கஃபைன், காஃபி, ஆல்கஹால் ஆகியவற்றை தவிருங்கள். அவை உடல் நீரை விரைவில் வறட்சியாக்கும்.