தாயின் கருவில் இருந்து வெளியே வந்தவுடன், மாறுபட்ட சூழலில் பாதுகாப்பாக வளர்வதற்கும், பிற நோய்த்தொற்றுகளிலிருந்து பாதுகாக்கும் விதமாக தடுப்பூசிகள் குழந்தைகளுக்கு செலுத்தப்படுகிறது. 'வருமுன் காப்பது போல பல்வேறு விதமான தடுப்பூசிகள் குழந்தைகளை எதிர்காலத்தில் குழந்தைகளுக்கு பேருதவியாக உள்ளது என்பது தான் நிதர்சன உண்மை'. ஆனால் பிறந்தது முதல் குழந்தைகளுக்கு செலுத்தப்படும் தடுப்பூசிகள் முறையாக செலுத்த தவறிய காரணத்தினால் தான், கடந்த ஒரு மாத காலமாக மும்பை மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகள் குழந்தைகளுக்கு அம்மை நோய் தீவிரமாக பரவி வருகிறது எனவும், கடந்த 2021 ஆம் ஆண்டு 40 மில்லியன் குழந்தைகள் தட்டமைக்காக தடுப்பூசியை செலுத்த தவறிவிட்டதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
பொதுவாக அம்மைக்கு எவ்வித மருந்து, மாத்திரைகள் இல்லையென்றாலும் குழந்தைகளுக்கு நோய் தொற்று ஏற்படாமல் தடுக்க இந்த தடுப்பூசிகள் மிகவும் பாதுகாப்பாக உள்ளது என்கின்றனர் சுகாதார ஆய்வாளர்கள். எனவே தான் குழந்தைகளுக்கு உரிய காலத்தில் போடப்படும் தடுப்பூசிகளை முறையாக செலுத்த வேண்டும் என்றும், இது அக்குழந்தையின் ஆரோக்கிய அரணாக அமையும் எனவும் கூறப்படுகிறது. இதோடு எதிர்காலத்தில் ஏற்படும் பெரும் செலவையும், பெற்றோர்களுக்கு தேவையற்ற மன உளைச்சலையும் குறைப்பதாக அமைகிறது. எனவே பிறந்தது முதல் குறிப்பிட்ட காலத்திற்கு குழந்தைகளுக்கு போட வேண்டிய தடுப்பூசிகளை முறையாக செலுத்த வேண்டும். இதோ என்னென்ன தடுப்பூசிகள் குழந்தைகளுக்கு போடப்படுகிறது? அதன் பாதுகாப்பு அம்சங்கள் என்ன என்பது குறித்து இங்கே விரிவாக அறிந்துக் கொள்வோம்..
மீஸ்லஸ், மம்ப்ஸ் மற்றும் ரூபெல்லா தடுப்பூசி : இத்தடுப்பூசி தட்டம்மை, சளி மற்றும் மணல்வாரிக்கு எதிராக போடப்படுவதாகும். இத்தடுப்பூசி இரண்டு அளவுகளில் செலுத்தப்படுகிறது. முதலாவது டோஸ் குழந்தைகளின் 9 முதல் 15 மாதங்கள் வரை கொடுக்கப்படுகிறது, இரண்டாவது டோஸ் 15 மாதங்கள் முதல் 6 வயது வரை செலுத்தப்படுகிறது..
பி.சி.ஜி தடுப்பூசி (BCG vaccine - Bacille Calmette-Guerin): குழந்தைப் பிறந்ததும் போடப்படும் முதல் தடுப்பூசி அதாவது தோல் ஊசியைத் தான் பி.சி.ஜி தடுப்பூசி என்கிறார்கள். டி.பி எனப்படும் காச நோய் வருவதைத் தடுக்கிறது. அரை மில்லி அளவிற்கு இந்த வாக்சின் குழந்தைகளுக்கு செலுத்தப்படுகிறது. இது மூளை மற்றும் குழந்தைகளின் வளர்ச்சிக்கு உதவியாக உள்ளது. உலக சுகாதார அமைப்பின் தகவலின் படி, இந்தியாவில் மட்டும் 1.40 கோடி பேர் காசநோயால் பாதிக்கப்படும் நிலையில், இதில் 20 சதவீதம் பேர் குழந்தைகள் ஆவார்கள். எனவே இந்த தடுப்பூசியை மறக்காமல் செலுத்த வேண்டும் என்கின்றனர் சுகாதார ஆய்வாளர்கள்.
பெண்டாவலன்ட் தடுப்பூசி : டிப்தீரியா, பெர்டுசிஸ், டெட்டன்ஸ், ஹைபடைடிஸ் பி மற்றும் ஹிப் போன்ற உயிருக்கு ஆபத்தான 5 நோய்களுக்கு எதிராக போராடும் திறன் கொண்டதாக பெண்டாவலன்ட் தடுப்பூசி உள்ளது. குழந்தைகளுக்கு 6வது, 10வது,14 வது வாரங்களில் 3 தவணைகளாக போலியா சொட்டு மருந்து உடன் இந்த பெண்டாவலன்ட் தடுப்பூசியை குழந்தைகளுக்கு போட வேண்டும்.
ஜப்பானிய மூளைக்காய்ச்சல் தடுப்பூசி : இந்தியாவில் ஜப்பானிய மூளைக்காய்ச்சலினால் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகப் புள்ளி விபரங்கள் தெரிவிக்கிறது. எனவே குழந்தைகளுக்கு டெங்கு, மஞ்சள் காமாலை உள்ளிட்ட பிற நோய் வைரஸ்களில் இருந்து குழந்தைகளைக் காப்பாற்ற ஜப்பானிய மூளைக்காய்ச்சல் தடுப்பூசி பேருதவியாக உள்ளது. இந்த தடுப்பூசி குழந்தைகளுக்கு 9 மாதங்கள் முதல் ஒரு வயது வரை செலுத்தப்படுகிறது.