உடலுறவு பற்றி பொதுவெளியில் பேச தயங்கும் காலம் போய்விட்டது. ஆண்களோ? பெண்களோ? உடல் உறவில் அக்கறையுடனும், பாதுகாப்புடனும் இருக்க வேண்டும் என்பதற்காக பல எச்சரிக்கைப் பதிவுகளும் சோசியல் மீடியாவில் வைரலாகிறது. குறிப்பாக சுய இன்பம் காணுதல் என்ற விஷயத்தை ஆண்கள் முதல் பெண்கள் வரை அனைவரும் மேற்கொள்கின்றனர்.
ஒருவர் சுய இன்பம் மேற்கொள்வது என்பது ஆரோக்கியமான விஷயம் தான் பக்க விளைவுகள் எதுவும் ஏற்படாது என மருத்துவ ரீதியாக கூறப்பட்டாலும், இதனால் பல நேரடி பிரச்சனைகளை நாம் சந்திக்க நேரிடும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளவேண்டும். இன்றைக்கு சுய இன்பம் காண்பதால் என்னென்ன? பிரச்சனைகளை நாம் சந்திக்க நேரிடும்? எனவும் இந்த விஷயத்தில் பெண்கள் அறிந்துக்கொள்ள வேண்டிய விஷயங்கள் என்ன? என்பது குறித்து இங்கே அறிந்துக்கொள்வோம்.
மனநிலை குறித்த புரிதல் : உடலுறவு என்பது ஒரு விதமான உடற்பயிற்சி என்றே கூறலாம். இது நம்முடைய மனதை ஒருநிலைப்படுத்துகிறது. ஆனால் வெறுமனே நாம் இந்த நிலையை அடைந்து விட முடியாது. நிச்சயம் நாம் கேட்கும் சில இசை, பாடல், சினிமா அல்லது சீரியல்களில் தோன்றும் செக்ஸ் காட்சிகள் அனைத்தும் நம்முடைய மனநிலையை ஒருங்கிணைத்து பாலியல் உறவு ஈடுபட நம் மனதைத் தூண்டுகிறது.
கிளிட்டோரஸ் பாதுகாப்பு : பிறப்புறப்பைக் கைகளால் தீண்டி சுய இன்பம் காணும் பலர் உள்ளனர். பெண்கள் உச்சத்தை அடைவதற்கு, உடலில் அதிக உணர்திறன் கொண்ட புள்ளிகளான எரோஜெனஸ் அதிகம் உள்ள பகுதி என்றால் அது கிளிட்டோரஸ் தான். இது மிகவும் சென்சிடிவ்வான பகுதி என்பதால் கவனமாக கையாள வேண்டும். பெண்கள் அளவுக்கு அதிகமாக பிறப்புறப்பைக் கைகளால் தீண்டுவது, அடிக்கடி மேற்கொள்ளும் போது, அந்த பகுதியில் ஏற்படுகின்ற அதிகப்படியான அதிர்வுகளால் பிறப்புறப்பில் சிறு சிறு காயங்கள், தழும்புகள், தடிப்புகள் ஆகியவை ஏற்படும். இதோடு அந்த இடங்களில் பாக்டீரியாக்கள் தொற்று ஏற்படுவதோடு பிறப்புறப்பில் உள்நோக்கி சென்று பல பாலியல் நோய்களை ஏற்படுத்தும். எனவே சுய இன்பம் காணும் போது பாதுகாப்பாக இருப்பது அவசியமான ஒன்று.
சுய இன்பத்தால் ஏற்படும் வலிகள் : பொதுவாக சுய இன்பம் காணும் போது பெண்கள் சில நேரங்களில் உச்சத்தை அடைவதற்கு இரண்டு நிமிடங்கள் எடுத்துக்கொள்கிறார்கள். ஆனால் சிலருக்கோ ஒரு மணி நேரம் கூட எடுக்கும். இதனால் நீங்கள் உங்களது பார்டனருடன் தாம்பதியத்தில் ஈடுபடும் போது அதிக வலியை நீங்கள் பெறக்கூடும்.இதோடு அதிகமாக சுய இன்பம் காணும் போது நரம்புகள் சோர்வடையும். மேலும் பிறப்புறப்பு பகுதியில் அதிக வறட்சியும் ஏற்படுகிறது. எனவே எச்சரிக்கையுடன் நீங்கள் இருக்க வேண்டும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
சகிப்புத்தன்மையைப் பாதித்தல் : பெண்களோ? அல்லது ஆண்களோ? அதிகளவு சுய இன்பம் காணும் போது, உடல் பலவீனத்திற்கு வழிவகுக்கும். இதோடு உங்களது வாழ்க்கை துணையோடு நீங்கள் பாலியல் உறவு வைத்துக் கொள்ளும் போது சகிப்புத்தன்மையைப் பாதிக்கிறது. இதனால் உங்களது உறவுகளுக்கு இடையே பாலியல் ரீதியாக ஏற்படும் நெருக்கத்தைப் பாதிக்கிறது. இதனால் பல பிரச்சனைகளையும் நீங்கள் உங்களது வாழ்வில் சந்திக்க வாய்ப்புள்ளது. இருப்பினும், சுய இன்பத்திற்கான வயது மற்றும் பாலியல் தூண்டுதலின் தன்மையைப் பொறுத்து பெண்ணுக்குப் பெண் மாறுபடும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.