இதற்கு முழுக்க முழுக்க சர்க்கரைதான் காரணம் என்கிறது. அதாவது அதிகப்படியான சர்க்கரை நுகர்வு இன்சுலின் தட்டுப்பாட்டை உருவாக்குகிறது. இதனால் தலைக்கு இரத்த ஓட்டம் சீராக கிடைப்பதில்லை. இரத்த ஓட்டம் சீராக இருந்தால்தான் முடி வளர்ச்சி ஆரோக்கியமாக இருக்கும். அப்படி இரத்த ஓட்டம் இல்லாதபோது முடியின் வேர்கள் சேதமடைகின்றன. எனவேதான் முடி உதிர்ந்து அந்த இடத்தில் முடி வளர வாய்ப்புகளின்றி போகிறது.
நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (CDC) படி, 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களில் 63 சதவீதம் பேர் தினமும் குறைந்தது ஒரு சர்க்கரை நிறைந்த பானத்தையாவது குடிக்கிறார்கள். இதன் காரணமாக, வழுக்கை மட்டுமின்றி, சர்க்கரை நோய், கொலஸ்ட்ரால், ரத்த அழுத்தம் உள்ளிட்ட பல நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. ஒவ்வொருவரும் தங்கள் உணவில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த வேண்டும். இதனால் வழுக்கையை மட்டுமல்ல, நாள்பட்ட நோய்களையும் தவிர்க்கலாம்.