கொரோனா வைரஸ் தொற்று பரவல் தொடங்கிய நாளிலிருந்தே மக்கள் தங்களுடைய நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கான விஷயங்களில் கவனம் செலுத்தி வருகின்றனர். ஊட்டச்சத்து மிக்க உணவு, உடற்பயிற்சி, ஆழ்ந்த தூக்கம் என ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றி வருகின்றனர். இது நல்ல விஷயம் என்றாலும் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து வருகிறது என்பதை தெரிந்துகொள்வதும் அவசியம். அந்த அறிகுறிகளை சுதாரித்துக்கொண்டு உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவியாக இருக்கும்.