ஆனால், பாலியல் உறவு கொள்ள வேண்டும் என்ற ஆசையும், குறுகுறுப்பான எண்ணமும் நம் மனதில் தோன்றிய பிறகு உடனடியாக நாம் செய்ய வேண்டிய காரியம் கைகளை கழுவுவதுதான். ஏனென்றால் தாம்பத்ய உறவின்போது பிறப்புறுப்புகளின் மீது நம் கைகளை பயன்படுத்துகின்ற சமயத்தில் கைகளில் உள்ள கிருமிகள் நம் உடலுக்குள் செல்ல வாய்ப்பு இருக்கிறது.
அழுக்கான இடங்களில் ஃபோனும் ஒன்று : இரவு நேரத்தில் பாலியல் உறவு வைத்துக் கொள்ளும் தம்பதியர்கள் பலரும், மாலையில் வீடு திரும்பியவுடன் அல்லது இரவு உணவுக்கு முன்னர் குளிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். அவ்வாறு குளித்துவிட்டால் நம் கைகள் சுத்தமாக இருக்கும் என்று அர்த்தம் கிடையாது. ஏனென்றால் குளித்த பிறகு நாம் கிருமிகள் நிறைந்த வீட்டின் தரை தளங்கள், சோஃபா போன்றவற்றில் அமர்ந்து எழுகின்றோம்.
வளர்ப்பு பிராணிகள் உண்டா.! வீட்டில் நாய், பூனை போன்ற வளர்ப்புப் பிராணிகளை வளர்ப்பவர்கள் கவனத்துடன் இருக்க வேண்டும். ஏனென்றால் பிராணிகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவும் தொற்றுகளின் மூலமாக 240 வகையான நோய்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக நாயை இரவில் தொட்டு, கட்டி போட்டுவிட்டு, அப்படியே படுக்கையறைக்கு செல்லும் பட்சத்தில், பிறப்புறுப்புகளில் ரிங்வார்ம்ஸ் அல்லது ரவுண்ட்வார்ம்ஸ் பரவக் கூடும்.
முறையாக சுத்தம் செய்ய வேண்டும் : கைகளை சுத்தம் செய்கிறேன் என்ற பெயரில் பைப்பில் கையை நீட்டி விட்டு வருவதுதான் பெரும்பாலானோர் கடைப்பிடிக்கும் பழக்கம். ஆனால், அப்படி இல்லாமல் கைகளின் ஒவ்வொரு பகுதிகளிலும், குறிப்பாக விரல் இடைவெளிகளில் முறைப்படி தேய்த்து கழுவ வேண்டும். குறைந்தபட்சம் 20 நொடிகள் கைகளை கழுவ வேண்டும்.