இதனால் விந்தணுக்கள் கருமுட்டையை அடைய முடியாது போகிறது. இதன் காரணமாக குழந்தையின்மை பாதிப்பு ஏற்படுகிறது. ஃபலோபியன் குழாயில் ஏற்பட்டுள்ள இந்த குறைபாட்டை முறையான மருத்துவ பரிசோதனை மூலம் மட்டுமே கண்டறிய முடியும். இதே போன்று என்னென்ன காரணங்களால் பெண்கள் கர்ப்பமாகாமல் போகிறார்கள் என்பதை பற்றி இனி பார்க்கலாம்.
கருப்பையில் பாதிப்பு : கருப்பையில் உண்டாக கூடிய கட்டிகள், உட்புற குறைபாடுகளை தருகின்றன. இவை கருப்பையின் சுவர்களில் உள்ள புற்றுநோய் அல்லாத வளர்ச்சிகள் கருவுற்ற முட்டை கருப்பை சுவருடன் இணைவதை கடினமாக்குகிறது. இது தவிர எண்டோமெட்ரியல் பாலிப்கள் அல்லது அசாதாரண கருப்பை வடிவம் போன்ற பிற நிலைமைகளும் கர்ப்பமாவதில் வாய்ப்புகளை குறைக்கலாம்.
வெரிகோசெல்ஸ் : இந்த பாதிப்பு நிலை ஆண்களுக்கு பொதுவாக இருக்கும். விதைப்பையில் உள்ள நரம்புகள் தடுக்கப்பட்டு, விதைப்பையில் வெப்பநிலை அதிகரிக்கும். அதிக வெப்பநிலை காரணமாக விந்தணுக்கள் வளர்ச்சி பெற இயலாது. ஆண்களின் விந்தணு எண்ணிக்கை குறைவதற்கு வெரிகோசெல்ஸ் முக்கிய காரணங்களில் ஒன்றாக உள்ளது. எனவே, இது தாம்பத்திய வாழ்வில் குழந்தையின்மையை ஏற்படுத்துகிறது.
அசாதாரண ஓவலேஷன் : பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் (பிசிஓஎஸ்) என்பது இன்று பல பெண்களுக்கும் இருக்க கூடிய பாதிப்பாக உள்ளது. மன அழுத்தம் மற்றும் அதிக அல்லது குறைந்த உடல் எடை போன்ற பல மருத்துவ நிலைகள் ஒரு பெண்ணின் அண்டவிடுப்பை (ஓவலேஷன்) பாதிக்கிறது. இந்த நிலைமைகளால் பெண்களுக்கு தொடர்ந்து கருமுட்டை வெளிப்படுவதில்லை. இது கர்பமாவதன் வாய்ப்புகளை குறைக்கிறது.
வாழ்க்கை முறை காரணிகள் : தூக்கமின்மை, மன அழுத்தம், வயது, அதிக எடை மற்றும் குறைந்த எடை ஆகியவை கர்ப்பமாவதற்கான வாய்ப்பைக் குறைக்கின்றன. மேலும், தாமதமாக தூங்குதல், மது அருந்துதல், ஜங்க் உணவுகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் போன்ற தவறான வாழ்க்கை முறை பழக்கங்கள் நீண்ட காலத்திற்கு பிறகு மனித உடலின் அடிப்படை உயிரியல் செயல்பாடுகளை பாதிக்கிறது.இதனால் நீரிழிவு, சிறுநீரக நோய்கள் போன்ற பாதிப்புகள் உண்டாகி பலருக்கு கர்ப்பம் தரிப்பதற்கான வாய்ப்புகளையும் பாதிக்கிறது. மேலும், அறுவை சிகிச்சை போன்ற மருத்துவ சிகிச்சைகளும் கர்ப்பம் தரிப்பதற்கான வாய்ப்புகளை குறைக்கின்றன.