கர்நாடகாவில் 5 வயது சிறுமி ஜிகா வைரஸால் பாதிக்கப்பட்டது குறித்து பேசியபோது இவ்வாறு கூறியுள்ளார். மேலும் அவர் “ ஜிகா வைரஸும் அதிக தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஆபத்தான வைரஸ் என்பதால் முன்னெச்சரிக்கையாக செயல்படுவது அவசியம். இந்தியா ஜிகா வைரஸுக்கான தடுப்பூசியை உருவாக்கும் முயற்சியில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அப்படி ஜிகா வைரஸுக்கான தடுப்பூசி கண்டுபிடிக்கும் முதன்மை நாடுகளில் நாமும் ஒருவராக இருப்போம்.
ஜிகா வைரஸ் பரவல் தீவிரமாக இருந்தால் அதன் தாக்கமும் தீவிரமாக இருக்கும். குறிப்பாக கர்ப்பிணிகள் பாதிக்கப்பட்டால் கருவில் உள்ள குழந்தையும் பாதிக்கப்படும். எனவே நாம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் தயாராக இருக்க வேண்டும்” என கூறியுள்ளார். கர்நாடகாவை தொடர்ந்து புனேவிலும் ஜிகா வைரஸால் ஒருவர் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.