முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » உடலில் கொழுப்பு அதிகரித்துவிட்டதா? என்னென்ன பிரச்சனைகள் ஏற்படும் தெரியுமா?

உடலில் கொழுப்பு அதிகரித்துவிட்டதா? என்னென்ன பிரச்சனைகள் ஏற்படும் தெரியுமா?

High Cholesterol | மோசமான உணவுப் பழக்கம், உடல் பருமன், உடல் இயக்கமின்மை, புகைப்பிடித்தல், மது அருந்துதல் ஆகியவை நம் உடலில் கெட்ட கொழுப்புகள் அதிகரிப்பதற்கான காரணம் ஆகும்.

  • 18

    உடலில் கொழுப்பு அதிகரித்துவிட்டதா? என்னென்ன பிரச்சனைகள் ஏற்படும் தெரியுமா?

    ஹார்ட் அட்டாக் மற்றும் ஸ்டிரோக் போன்ற இதயம் தொடர்புடைய பெரிய அளவிலான பாதிப்புகள் ஏற்படுவதற்கு மிக முக்கியமான காரணமாக இருப்பது அதிக கொலஸ்ட்ரால் ஆகும். உலக அளவில் ஆண்டுதோறும் 2.6 மில்லியன் மக்கள் இதனால் உயிரிழக்கின்றனர் என்று உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.

    MORE
    GALLERIES

  • 28

    உடலில் கொழுப்பு அதிகரித்துவிட்டதா? என்னென்ன பிரச்சனைகள் ஏற்படும் தெரியுமா?

    மோசமான உணவுப் பழக்கம், உடல் பருமன், உடல் இயக்கமின்மை, புகைப்பிடித்தல், மது அருந்துதல் ஆகியவை நம் உடலில் கெட்ட கொழுப்புகள் அதிகரிப்பதற்கான காரணம் ஆகும். நமது வாழ்வியல் மோசமாக இருப்பதே இந்த பிரச்சனைக்கு காரணம் என்றால் அது மிகையல்ல.

    MORE
    GALLERIES

  • 38

    உடலில் கொழுப்பு அதிகரித்துவிட்டதா? என்னென்ன பிரச்சனைகள் ஏற்படும் தெரியுமா?

    அதிக கொலஸ்ட்ரால் என்றால் எப்படி இருக்கும்? நமது ரத்தத்தில் வேக்ஸ் போல உள்ள ஒரு பொருள் தான் கொலஸ்ட்ரால் ஆகும். இது உடலில் ஆரோக்யமான செல்களை கட்டமைக்க உதவுகிறது. பொதுவாக, உடலுக்கு நன்மை பயக்கக் கூடிய கொழுப்பு வகையை High Density Lipoprotein (ஹெச்டிஎல்) என்றும், உடலுக்கு தீமை பயக்கக் கூடிய கொழுப்பு வகையை Low Density Lipoprotein (எல்டிஎல்) என்றும் குறிப்பிடுகிறோம். நமது ரத்தத்தில் மிக அதிகப்படியான கெட்ட கொழுப்புகள் இருந்தால், ரத்த நாளங்களில் அது தட்டுக்களாக படியத் தொடங்கும். உடலின் பல பகுதிகளுக்கு ரத்த ஓட்டம் செல்வதற்கு இது இடையூறாக இருக்கும் அல்லது முழுமையான தடையை ஏற்படுத்தும். ஏதேனும் ஒரு சமயத்தில் இந்த தட்டுக்கள் உடைந்து கட்டியாக அடைப்பதுதான் ஹார்ட் அட்டாக் மற்றும் ஸ்டிரோக் போன்ற பாதிப்புகள் ஆகும். அதிக கொலஸ்ட்ரால் என்பது பொதுவாக எல்லோருக்கும் வரக் கூடியதுதான் என்றாலும், முறையான சிகிச்சை, உடற்பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு போன்றவை மூலமாக இதற்கு தீர்வு காண முடியும்.

    MORE
    GALLERIES

  • 48

    உடலில் கொழுப்பு அதிகரித்துவிட்டதா? என்னென்ன பிரச்சனைகள் ஏற்படும் தெரியுமா?

    சைலண்ட் கில்லர்: உயர் ரத்த அழுத்தம் மற்றும் அதனுடன் அதிக கொலஸ்ட்ரால் என்பது சைலண்ட் கில்லர் ஆகும். ஏனென்றால் மிக வெளிப்படையான அறிகுறிகள் மூலமாக இதை கண்டறிய முடியாது. ஆகவே, இது நம் உயிருக்கு அபாயத்தை ஏற்படுத்தக் கூடிய பிரச்சனை ஆகும்.

    MORE
    GALLERIES

  • 58

    உடலில் கொழுப்பு அதிகரித்துவிட்டதா? என்னென்ன பிரச்சனைகள் ஏற்படும் தெரியுமா?

    எச்சரிக்கை தரும் அறிகுறி: அதிக கொலஸ்ட்ரால் இருப்பதற்கு பெரிய அளவில் அறிகுறிகள் தென்படாது என்றாலும் கூட, நாளடைவில் இதை கண்டுகொள்ளாமல் இருக்கும்போது பெரிய பாதிப்பு ஏற்படும். சில சமயங்களில் கால்களுக்கான ரத்த ஓட்டம் தடைபட்டு அங்கு peripheral arterial disease வரக் கூடும்.

    MORE
    GALLERIES

  • 68

    உடலில் கொழுப்பு அதிகரித்துவிட்டதா? என்னென்ன பிரச்சனைகள் ஏற்படும் தெரியுமா?

    கால்களில் பாதிப்பு: நமது பின்னங்கால் பகுதியில் உள்ள ரத்த நாளங்கள் முழுமையாக அடைபடும் பட்சத்தில் ரத்த ஓட்டம் வெகுவாகக் குறைந்துவிடும். அதனை critical limb ischemia என குறிப்பிடுகின்றனர். கால்களில் சாதாரணமாகவே வலி, நடக்கும்போது வலி, தோள்பட்டை வலி போன்றவை ஏற்படலாம்.

    MORE
    GALLERIES

  • 78

    உடலில் கொழுப்பு அதிகரித்துவிட்டதா? என்னென்ன பிரச்சனைகள் ஏற்படும் தெரியுமா?

    எச்சரிக்கை தேவை: நமது ரத்த நாளங்கள் சுருங்கி கை, கால்களுக்கான ரத்த ஓட்டம் தடைபடுவதைத் தான் peripheral arterial disease எனக் கூறுகிறோம். நமது ரத்த நாளங்களில் அதிக கொழுப்பு படிந்துள்ளது என்பதற்கான அறிகுறி இதுவாகும்.

    MORE
    GALLERIES

  • 88

    உடலில் கொழுப்பு அதிகரித்துவிட்டதா? என்னென்ன பிரச்சனைகள் ஏற்படும் தெரியுமா?

    பரிசோதனை அவசியம்: நாம் உணரும் வகையில் அறிகுறிகள் இருக்காது என்பதால், அவ்வபோது ரத்த பரிசோதனை செய்து தெரிந்து கொள்வது நல்லது. உங்கள் வயது, உடல் எடை போன்றவற்றை பரிசீலனை செய்து, சில பரிசோதனைகளையும், மருந்துகளையும் மருத்துவர் பரிந்துரை செய்யலாம். நாமும், நமது உணவுப் பழக்கம், வாழ்வியல் போன்றவற்றை மாற்றிக் கொள்ள வேண்டும்.

    MORE
    GALLERIES