ஓம விதையில் பல நன்மைகள் உள்ளன. இது பல நோய்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். ஓமம் வயிற்றுக்கும் மிகவும் நல்லது என்று கருதப்படுகிறது. வாயுப் பிரச்சனை, அஜீரணக் கோளாறு, வயிற்று வலி, மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளை சரி செய்ய ஓமம் தண்ணீர் குடிக்கலாம். ஓமம் ஆயுர்வேத பண்புகள் நிறைந்தது. ஓம விதை தண்ணீரை குடிப்பதால் பல நன்மைகள் உள்ளன. Web MD படி, ஓமம் உட்கொள்வதன் மூலம் பல உடல்நலப் பிரச்சனைகளில் இருந்து காப்பாற்ற முடியும். அப்படி ஓம விதை கொதிக்க வைத்தோ அல்லது இரவு ஊற வைத்து மறுநாள் காலையோ அந்த தண்ணீரை குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன பார்க்கலாம்.
2. கொலஸ்ட்ராலை கட்டுக்குள் வைத்திருக்கும்: ஓம விதையில் ஹைப்பர்லிபிடெமிக் எதிர்ப்பு பண்பு காணப்படுகிறது. அஜ்வைன் தண்ணீரைக் குடிப்பதால், உடலின் கொலஸ்ட்ரால், எல்டிஎல்-கொலஸ்ட்ரால், ட்ரைகிளிசரைடுகள் மற்றும் மொத்த கொழுப்புச் சத்துக்களைக் குறைக்கலாம். கொலஸ்ட்ரால் குறைவதால் இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கவும் உதவுகிறது. அதோடு கொலஸ்ட்ரால் கட்டுப்பாட்டில் இருக்கும்.
3. செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைத்திருக்கும்: தினமும் அஜ்வைன் தண்ணீரைக் குடிப்பதால், செரிமான அமைப்பு ஆரோக்கியமாகவும் வலுவாகவும் இருக்கும். இதில் கரையக்கூடிய நார்ச்சத்து உள்ளது. இது செரிமான அமைப்பை வலுப்படுத்த உதவுகிறது. மோசமான வாழ்க்கை முறை மற்றும் அதிகப்படியான நொறுக்குத் தீனிகளை உட்கொள்வதால், உண்டாகும் வயிற்றில் வாயு பிரச்சனையை சரி செய்ய அஜ்வைன் தண்ணீர் பருக சரியாகலாம்.