நம் உடலில் உயிர் இயங்குவதற்கான ராஜ உறுப்புகளில் ஒன்றுதான் இதயம். நம் முடி, முகம், சருமம் போன்ற வெளிப்புற உறுப்புகளின் ஆரோக்கியத்திற்கு நாம் அதிக கவனம் செலுத்துகின்ற போதிலும், உயிரை இயங்க வைக்கும் இதயத்தின் ஆரோக்கியம் குறித்து மறந்து விடுகிறோம். இதயம் மட்டுமல்ல சிறுநீரகம், கல்லீரல் போன்ற முக்கிய உறுப்புகளின் ஆரோக்கியத்தை நாம் கண்டு கொள்வதில்லை.
பிற உறுப்புகளை விட்டு தள்ளுங்கள், அவை சில நிமிடங்கள் செயலிழந்து போனால், நாம் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுக் கொள்ள முடியும். ஆனால், இதயத்தை நினைத்துப் பாருங்கள். ஒன்றிரண்டு நிமிடமெல்லாம் வேண்டியதில்லை. ஒரு சில விநாடிகள் இதயம் துடிக்காமல் இருந்தாலே நம் உயிருக்கு உத்தரவாதம் இல்லை.ஆக, இதய ஆரோக்கியத்தை தக்க வைத்துக் கொள்ளும் வாழ்வியல் பழக்க வழக்கங்களை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும். ஆனால், துரதிருஷ்டம் என்னவென்றால், நம் வாழ்க்கைச் சூழல் காரணமாக ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவதே கடினமானதாக மாறிவிட்டது.
பெர்ரி பழங்கள்அனைத்து வகை பெர்ரி பழங்களும் நம் இதய நலனுக்கு நல்லது தான். அது ஸ்ட்ராபெர்ரி என்றாலும் சரி, பிளாக்பெர்ரி என்றாலும் சரி அவற்றில் ஊட்டச்சத்துக்கள் ஏராளம் உண்டு. நாம் விரும்பி உண்ணும் கோடைகால சீசன் பழமான நாவல் பழங்களும் செர்ரி வகையை சேர்ந்ததுதான். இதய நோய்களை செர்ரி பழங்கள் தடுக்கக் கூடியது.
கீரைகள் : பச்சைக் கீரைகள் அல்லது கீரையுடன் கூடிய காய்கறிகள் அனைத்துமே இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும். குறிப்பாக உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கும். எந்த அளவுக்கு மிகுதியாக கீரைகள் எடுத்துக் கொள்கிறோமோ, அந்த அளவுக்கு இதய நலனுக்கு நல்லது. இறைச்சியை போல் விலை உயர்ந்தவை அல்ல கீரைகள். ஆக, தினசரி வாங்கி சாப்பிடுங்கள்.