முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » மழைக்காலம் தொடங்கிவிட்டது..தண்ணீரை கொதிக்க வைத்துக் குடிப்பது அவசியம்..! ஏன் தெரியுமா..?

மழைக்காலம் தொடங்கிவிட்டது..தண்ணீரை கொதிக்க வைத்துக் குடிப்பது அவசியம்..! ஏன் தெரியுமா..?

மழைத் தொற்று காரணமாக நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தால் கொரோனா போன்ற தீவிர தொற்றுகளும் எளிதில் தொற்றிக்கொள்ளும் வாய்ப்புகள் அதிகம். எனவே முடிந்த வரை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளை உட்கொள்வதை கட்டாயமாக்குங்கள்.

  • 16

    மழைக்காலம் தொடங்கிவிட்டது..தண்ணீரை கொதிக்க வைத்துக் குடிப்பது அவசியம்..! ஏன் தெரியுமா..?

    கடந்த ஒரு வாரமாக மழை மாலை நேரங்களில் கொட்டித் தீர்த்து வருகிறது. ஏற்கெனவே கொரோனா பாதிப்பால் மீண்டுவர முடியாத நிலையில் தற்போது மழைக்கால தொற்று அறிகுறிகளும் வரத் தொடங்கியுள்ளது. இந்த மழைத் தொற்று காரணமாக நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தால் கொரோனா போன்ற தீவிர தொற்றுகளும் எளிதில் தொற்றிக்கொள்ளும் வாய்ப்புகள் அதிகம். எனவே முடிந்த வரை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளை உட்கொள்வதை கட்டாயமாக்குங்கள். அதேபோல் நோய் தொற்றுக்குக் காரணமாக இருக்கும் விஷயங்களை தவிர்த்துவிடுதல் நல்லது.

    MORE
    GALLERIES

  • 26

    மழைக்காலம் தொடங்கிவிட்டது..தண்ணீரை கொதிக்க வைத்துக் குடிப்பது அவசியம்..! ஏன் தெரியுமா..?

    குறிப்பாக நாம் அருந்தும் தண்ணீர் மூலமாகவும் மழைக்காலங்களில் தொற்று ஏற்படுவதற்கான சாத்தியக் கூறுகள் இருக்கின்றன. ஏனெனில் கழிவு நீர் சில நேரங்களில் குடிநீரிலும் கலந்துவிடலாம். இதனால் தொற்றுகள் எளிதில் பரவும்.

    MORE
    GALLERIES

  • 36

    மழைக்காலம் தொடங்கிவிட்டது..தண்ணீரை கொதிக்க வைத்துக் குடிப்பது அவசியம்..! ஏன் தெரியுமா..?

    அதோடு மழைக்காலங்களில் தண்ணீர் வெப்பநிலை குறைந்து குளுர்ச்சியாக இருக்கும். அதை அப்படியே நேரடியாக அருந்தும்போது சளி ,இருமல் , காய்ச்சலுக்குக் காரணமாக அமையலாம். எனவே தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து வடிகட்டி குடிக்கும் பதத்தில் ஆற வைத்து குடித்து வருவது அவசியம்.

    MORE
    GALLERIES

  • 46

    மழைக்காலம் தொடங்கிவிட்டது..தண்ணீரை கொதிக்க வைத்துக் குடிப்பது அவசியம்..! ஏன் தெரியுமா..?

    தண்ணீர் கொதிக்க ஆரம்பித்தவுடன் ஒரு நிமிடம் நன்கு சுழன்று கொதிக்கவிட்டு அடுப்பை அணைத்துவிட்டால் போதுமானது. நீங்கள் வாட்டர் பியூரிஃபையர் வைத்திருந்தாலும் தண்ணீரை கொதிக்க வைத்து அருந்துவது நல்லது. கொதித்ததும் வடி கட்டியில் வடிகட்டி குடிக்க வேண்டும்.

    MORE
    GALLERIES

  • 56

    மழைக்காலம் தொடங்கிவிட்டது..தண்ணீரை கொதிக்க வைத்துக் குடிப்பது அவசியம்..! ஏன் தெரியுமா..?

    அவ்வாறு தண்ணீரை கொதிக்க வைக்கும்போது அதில் இருக்கும் வைரஸ் , பாக்டீரியாக்கள் , கிருமிகள், பூஞ்சை தொற்றுகள் போன்றவை முற்றிலுமாக அழிந்துவிடும்.

    MORE
    GALLERIES

  • 66

    மழைக்காலம் தொடங்கிவிட்டது..தண்ணீரை கொதிக்க வைத்துக் குடிப்பது அவசியம்..! ஏன் தெரியுமா..?

    இந்த முறையில்தான் தண்ணீரை கொதிக்க வைத்து குடிக்க வேண்டும். வீட்டில் குழந்தைகள், பெரியவர்கள் இருந்தால் கட்டாயம் கொதிக்க வைத்த நீரைதான் குடிக்க வேண்டும்.

    MORE
    GALLERIES