நீரிழிவு நோயாளிகள் உடல் ஆரோக்கியம் பாதிக்காமல் தீபாவளி இனிப்புகள் சாப்பிட சில யோசனைகள்..
இந்த ஆண்டு நவம்பர் 14 ஆம் தீபாவளி பண்டிகை நடைபெறுகிறது. அதே நாளில் உலக நீரிழிவு தினமும் வருகிறது.
Web Desk | November 12, 2020, 10:56 AM IST
1/ 15
தீபாவளி எப்போதும் மக்களிடையே செழிப்பு, மகிழ்ச்சி மற்றும் ஒற்றுமையின் வெளிப்பாட்டினை கொண்டு வருகிறது. பண்டிகையின் போது கிட்டத்தட்ட ஒவ்வொரு இடமும் வண்ணமயமான விளக்குகள் மற்றும் பூக்களால் அலங்கரிக்கப்படும். தீபாவளி பண்டிகையில் இனிப்புகளுக்கும் ஒரு முக்கிய பங்கு உண்டு. சர்க்கரை உருகிய இனிப்புகள், உப்பு தின்பண்டங்கள் மற்றும் பிற உணவுகள் குடும்பத்தினருக்காகவும், நண்பர்களுக்காகவும் தயாரிக்கப்படுகின்றன.
2/ 15
நறுமணமும், சுவையும் நம்மை ஏதோ ஒரு இனிமையான சந்தோஷத்தில் ஈடுபடுத்துகின்றன. அவற்றை சாப்பிட வேண்டும் என்ற ஆசை நம் மனதில் எப்போதும் தோன்றும். இதுபோன்ற பண்டிகை இனிப்பு வகைகள் ஏற்கனவே சில நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சில சிக்கல்களை ஏற்படுத்துகின்றன. குறிப்பாக நீரிழிவு நோயாளிகளுக்கு சுகாதார சிக்கல்கள் ஏற்பட வழிவகுக்கும். இதுபோன்ற பண்டிகை காலங்களில் அவர்களின் ஆரோக்கியத்தை நிர்வகிக்கும் போது சுவையான உணவுகளை அனுபவிப்பது அவர்களுக்கு மிகவும் கடினம்.
3/ 15
பீட் ஓ ஆய்வின்படி, தீபாவளி போன்ற பண்டிகைகள் மக்களின் இரத்த-குளுக்கோஸ் அளவை கடுமையாக பாதிக்கும் என தெரிவித்துள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் ஏற்கனவே சர்க்கரை நோயால் பாதித்தவர்கள் பண்டிகை காலங்களில் 15 முதல் 18 சதவிகிதம் அதிகரித்திருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. சுவாரஸ்யமாக, இந்த ஆண்டு நவம்பர் 14 ஆம் தீபாவளி பண்டிகை நடைபெறுகிறது. அதே நாளில் உலக நீரிழிவு தினமும் வருகிறது. எனவே, உங்களுக்கு பிடித்த உணவுகள், விருந்து மற்றும் கொண்டாட்டங்களை அனுபவிக்கும் போது இரத்த-சர்க்கரை அளவை நிர்வகிக்க சில எளிய வழிமுறைகள் உள்ளன. அவற்றை குறித்து காண்போம்:
4/ 15
1. உங்கள் தினசரி உணவை சிறிய பகுதிகளாக சாப்பிட முயற்சி செய்யுங்கள். உதாரணத்திற்கு ஒரு நாளைக்கு 3 வேளை உணவுகளை சாப்பிடுவதற்கு பதிலாக 4 முதல் 5 முறை கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிடலாம். இது உங்கள் இரத்த சர்க்கரை அளவை மேலும் சீராக வைத்திருக்கும்.
5/ 15
2. உலர் பழங்கள், பாதம், பிஸ்தா போன்ற பருப்பு வகைகள் மற்றும் பழங்கள் போன்ற ஆரோக்கியமான சிற்றுண்டிகளை சாப்பிடலாம்.
6/ 15
3. உங்கள் ஆரோக்கியத்திற்காக சுகர் பிரீ மூலம் வீட்டிலேயே தயாரிக்கப்படும் பாரம்பரிய இனிப்புகளை சாப்பிடலாம்.
7/ 15
4. உங்கள் உடலை நாள் முழுவதும் நீரேற்றமாகவும், ஊட்டச்சத்துடனும் வைத்திருங்கள்.
8/ 15
5. நீங்கள் சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றினால் உங்களுக்கு பிடித்த இனிப்புகளில் ஒரு சிறிய பகுதியை மட்டும் சாப்பிடலாம். ஆனால் எதையும் அதிகமாக சாப்பிட வேண்டாம்.
9/ 15
6. பால் சாக்லேட்டுக்கு பதிலாக குறைந்த அளவு சர்க்கரை கொண்ட டார்க் சாக்லேட்டை சாப்பிடலாம்.
10/ 15
7. சர்க்கரை அதிகம் நிறைந்துள்ள பானங்களைத் தவிர்த்து, எலுமிச்சை சாறு, இளநீர் போன்ற சர்க்கரை இல்லாத பழச்சாறுகளை அருந்தலாம்.
11/ 15
8. உங்கள் இரத்த-சர்க்கரை அளவை பராமரிக்க மற்றும் கட்டுப்படுத்த வெள்ளை அரிசிக்கு பதில் வரகரிசி போன்ற பிற தானிய வகைகளை எடுத்துக்கொள்ளலாம். வெள்ளை அரிசியில் அதிக கிளைசெமிக் அளவு உள்ளது. இது உங்கள் சர்க்கரை அளவை அதிகரிக்கும்.
12/ 15
9. பிஸ்கட் மற்றும் கேக்குகள் போன்ற பேக்கரி உணவுகளையும், சமோசாக்கள், பக்கோடா போன்ற எண்ணெய் உணவுகளை சாப்பிடுவதைத் தவிர்க்கவும்.
13/ 15
10. பண்டிகைகளின் போது அதிகப்படியான மது அருந்துவதைத் தவிர்க்க வேண்டும். ஆல்கஹால் அதிக அளவு சர்க்கரையை கொண்டுள்ளது. இது உங்கள் உடலில் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும்.
14/ 15
11. பண்டிகை நாட்களில் கூட குறைந்தது 30 நிமிட உடற்பயிற்சி அல்லது சிறிது நேர உடற்பயிற்சியை தவறாமல் செய்ய முயற்சியுங்கள்.
15/ 15
இந்திய திருவிழாக்கள் எப்போதும் டன் கணக்கில் இனிப்புகள் மற்றும் சிற்றுண்டிகளுடன் கொண்டாடப்படுகின்றன. அவை மிக நெருக்கமான நபர்களுக்கு பரிசாக வழங்கப்படுகின்றன. எனவே, உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்காத வகையில் உங்களுக்கு பிடித்த சுவையான உணவுகளை அனுபவிக்க சரியான திட்டங்களையும் நடவடிக்கைகளையும் செய்யுங்கள்.