முகப்பு » புகைப்பட செய்தி » கொரோனா தற்காப்பு : தொடர்ந்து கைக்கழுவுதல், சானிடைசர் பயன்படுத்துவதால் 3-ல் 2 பங்கு மக்களுக்கு தோல் அழற்சியை உண்டாக்குகின்றன - ஆய்வு.

கொரோனா தற்காப்பு : தொடர்ந்து கைக்கழுவுதல், சானிடைசர் பயன்படுத்துவதால் 3-ல் 2 பங்கு மக்களுக்கு தோல் அழற்சியை உண்டாக்குகின்றன - ஆய்வு.

இதன் அறிகுறிகளில் பெண்கள்தான் அதிகமாக வறண்ட சருமத்தை உனர்வதாகக் கூறப்படுகிறது. அவர்கள் அடிக்கடி சோப்பு போட்டு கை கழுவும் பழக்கத்தையும், சானிடைசர் தடவுவதையும் தொடர்ச்சியாக செய்வதே காரணம் என்று கூறப்படுகிறது.

  • 15

    கொரோனா தற்காப்பு : தொடர்ந்து கைக்கழுவுதல், சானிடைசர் பயன்படுத்துவதால் 3-ல் 2 பங்கு மக்களுக்கு தோல் அழற்சியை உண்டாக்குகின்றன - ஆய்வு.

    கைக்கழுவுவதும், சானிடைசர் பயன்படுத்துவதும் மக்களின் புதிய பழக்கமாக மாறிவிட்டது. தற்போது அதை அவர்களுக்கே தெரியாமல் அடிக்கடி செய்யவும் ஆரம்பித்துவிட்டனர். இப்படி அடிக்கடி தொடர்ச்சியாக செய்வதால் அதிகபட்சமாக மூன்றில் இரண்டு பங்கு மக்கள் கைகளில் தோல் அழற்சி நோயால் பாதிக்கப்படுவதாக இந்திய ஆய்வு கூறுகிறது.

    MORE
    GALLERIES

  • 25

    கொரோனா தற்காப்பு : தொடர்ந்து கைக்கழுவுதல், சானிடைசர் பயன்படுத்துவதால் 3-ல் 2 பங்கு மக்களுக்கு தோல் அழற்சியை உண்டாக்குகின்றன - ஆய்வு.

    கர்நாடகாவில் உள்ள மங்களூர் ஃபாதர் முல்லர் மெடிகல் காலேஜ் இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளது. அதில் தோலில் ஏற்படக் கூடிய நீரிழப்பை தக்க வைக்கும் செயல்பாட்டை அளவிட இந்த ஆய்வை நடத்தியுள்ளது. இதற்காக 582 பேரை உட்படுத்தியுள்ளது. இதில் 291 பேர் சுகாதாரப் பணியாளர்களும் அடங்குவர்.

    MORE
    GALLERIES

  • 35

    கொரோனா தற்காப்பு : தொடர்ந்து கைக்கழுவுதல், சானிடைசர் பயன்படுத்துவதால் 3-ல் 2 பங்கு மக்களுக்கு தோல் அழற்சியை உண்டாக்குகின்றன - ஆய்வு.

    அப்படி ஆய்வு செய்ததில் சுகாதாரப் பணியாளர்களுக்கு தோல் அழற்சி உண்டாவதற்கான வாய்ப்பு 92.6 சதவீதம் பேருக்கு இருப்பதை கண்டறிந்துள்ளனர். சாதாரண மக்களுக்கு 68.7 சதவீதம் இருப்பதை உறுதி செய்துள்ளனர்.

    MORE
    GALLERIES

  • 45

    கொரோனா தற்காப்பு : தொடர்ந்து கைக்கழுவுதல், சானிடைசர் பயன்படுத்துவதால் 3-ல் 2 பங்கு மக்களுக்கு தோல் அழற்சியை உண்டாக்குகின்றன - ஆய்வு.

    இதன் அறிகுறிகளில் பெண்கள்தான் அதிகமாக வறண்ட சருமத்தை உனர்வதாகக் கூறப்படுகிறது. அவர்கள் அடிக்கடி சோப்பு போட்டு கை கழுவும் பழக்கத்தையும், சானிடைசர் தடவுவதையும் தொடர்ச்சியாக செய்வதே காரணம் என்று கூறப்படுகிறது.

    MORE
    GALLERIES

  • 55

    கொரோனா தற்காப்பு : தொடர்ந்து கைக்கழுவுதல், சானிடைசர் பயன்படுத்துவதால் 3-ல் 2 பங்கு மக்களுக்கு தோல் அழற்சியை உண்டாக்குகின்றன - ஆய்வு.

    இந்த ஆய்வு அடிக்கடி சோப்பு போட்டு கைக்கழுவுவதும், சானிடைசர் அதிகம் பயன்படுத்தும் சாதாரண பொது மக்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு அதன் தாக்கம் தோல்களில் எப்படி உள்ளது என்பதை கண்டறிய உதவியது. இதனால் இந்த ஆய்வு கை சுகாதாரத்தை பாதுகாக்க வேறெந்த மாற்றங்களைக் கொண்டு வரலாம். நீரிழப்பை தக்க வைக்க உதவும் தோலின் திறனையும் கண்டறியவும் உதவியாக இருந்தது என்று மோனிஷா மதுமிதா கூறியுள்ளார்.

    MORE
    GALLERIES