பெருங்காயத்தை குழம்பில் ஒரு சிட்டிகை சேர்த்தாலும் அதன் மணம் சுண்டி இழுக்கும். அதன் அளவு குறைவாக இருந்தாலும் நன்மைகளை ஏராளம் அள்ளித்தரும். குறிப்பாக பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இதில் நிறைவாக உள்ளன. அந்த வகையில் பெருங்காயத்தை வெந்நீரில் கலந்து குடித்தால் அதன் இன்னும் பல மருத்துவ நன்மைகளை பெறலாம். பெருங்காயத்தை வெந்நீரில் ஒரு சிட்டிகை கலந்து குடிப்பதன் நன்மைகளை ஊட்டச்சத்து நிபுணர் ப்ரீத்தி தியாகி விளக்குகிறார். அவை என்னென்ன பார்க்கலாம்.