முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » கிட்னி கல்.. சைனஸ் சளி பிரச்னை.. கற்பூரவல்லி இலையில் கொட்டிக்கிடக்கும் ஆரோக்கிய பயன்கள்.!

கிட்னி கல்.. சைனஸ் சளி பிரச்னை.. கற்பூரவல்லி இலையில் கொட்டிக்கிடக்கும் ஆரோக்கிய பயன்கள்.!

Karpuravalli Leaf | கற்பூரவள்ளி செடிகளின் இலைகள் சிறுநீரை அதிகம் பெருக்கும் தன்மை கொண்டது. இது சிறுநீரகங்களில் அதிகளவில் சேரும் உப்புகளை கரைத்து சிறுநீரகங்களின் நலனை காக்கிறது.

  • 19

    கிட்னி கல்.. சைனஸ் சளி பிரச்னை.. கற்பூரவல்லி இலையில் கொட்டிக்கிடக்கும் ஆரோக்கிய பயன்கள்.!

    பலரது வீட்டில் வீட்டை சுற்றி பல மூலிகை செடிகளை தங்களது தோட்டங்களில் அவற்றின் மகத்துவம் என்ன என்பதை அறியாமலே பலரும் வளர்த்து வருகின்றனர். அத்தகைய செடிகளில் கற்பூரவள்ளி (ஓமவல்லி) செடியும் ஒன்று. மற்ற மூலிகை செடிகளை காட்டிலும் கற்பூரவள்ளி செடியானது அதிக நறுமணத்துடன் காணப்படுகிறது. இதில் எண்ணற்ற பலன்கள் உள்ளது.

    MORE
    GALLERIES

  • 29

    கிட்னி கல்.. சைனஸ் சளி பிரச்னை.. கற்பூரவல்லி இலையில் கொட்டிக்கிடக்கும் ஆரோக்கிய பயன்கள்.!

    கற்பூரவள்ளி இலையானது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகுந்த பலனளிக்கக் கூடியது. கற்பூரவள்ளி இலையின் சாறை எடுத்து தேன் கலந்து அருந்தி வந்தால் சளி மற்றும் இருமல் தொல்லையிலிருந்து விடுபடலாம்.

    MORE
    GALLERIES

  • 39

    கிட்னி கல்.. சைனஸ் சளி பிரச்னை.. கற்பூரவல்லி இலையில் கொட்டிக்கிடக்கும் ஆரோக்கிய பயன்கள்.!

    நமது உடலின் மேற்பரப்பான தோலில் சில நுண்கிருமி தொற்றால் படை, சொறி, அரிப்பு போன்றவை ஏற்படுகின்றன. கற்பூரவள்ளி இலைகளை சிறிது பறித்து, நன்கு கசக்கி அந்த இலைகளின் துளிகளை பாதிக்கப்பட்ட தோல் பகுதிகளில் விட்டு வந்தால் விரைவில் குணமாகும்.

    MORE
    GALLERIES

  • 49

    கிட்னி கல்.. சைனஸ் சளி பிரச்னை.. கற்பூரவல்லி இலையில் கொட்டிக்கிடக்கும் ஆரோக்கிய பயன்கள்.!

    சுவாச பிரச்சனைகள் மழை மற்றும் குளிர்காலங்களில் வயது பேதமின்றி அனைவருக்கும் சளி, ஜலதோஷம் ஏற்பட்டு மூக்கடைப்பு, மூக்கில் நீர் ஒழுகுதல், தொண்டைக்கட்டு போன்றவை ஏற்படுகின்றது. கற்பூரவள்ளி செடிகளின் இலைகளை நன்றாக கசக்கி பிழிந்து, அந்த சாறை குடித்தால் மூக்கடைப்பு மற்றும் சைனஸ் தொந்தரவுகள் நீங்கும். அந்த இல்லை சொட்டுகளை தொண்டையில் படுமாறு அருந்த தொண்டைக்கட்டு, வறட்டு இருமல், சளி தொந்தரவுகள் ஆகியவை நீங்கும்.

    MORE
    GALLERIES

  • 59

    கிட்னி கல்.. சைனஸ் சளி பிரச்னை.. கற்பூரவல்லி இலையில் கொட்டிக்கிடக்கும் ஆரோக்கிய பயன்கள்.!

    குழந்தைகளுக்கு ஏற்படும் மார்புச்சளி நீங்கவும், அடிக்கடி மூச்சு விட முடியாமல் சிரமப்படுபவர்களுக்கும் சில சமயங்களில் இது ஆஸ்துமா காசநோயாக கூட மாறநேரிடும். இவர்கள் கற்பூரவள்ளி இலையையும், துளசி இலையையும் சம அளவு எடுத்து சுத்தம் செய்து லேசாக வதக்கி சாறு எடுத்து. 5 மி.கி. அளவு தினமும் காலை வேளையில் கொடுத்து வந்தால் மார்புச்சளி குணமடையும்.

    MORE
    GALLERIES

  • 69

    கிட்னி கல்.. சைனஸ் சளி பிரச்னை.. கற்பூரவல்லி இலையில் கொட்டிக்கிடக்கும் ஆரோக்கிய பயன்கள்.!

    சிலருக்கு சில வகையான உணவுகள் அதிகளவிலும், நேரங்கடந்து சாப்பிடும் போதும் அஜீரண பிரச்சனை ஏற்படுகிறது. நெஞ்செரிச்சல் போன்ற பிரச்னையும் உருவாகிறது. இப்படிபட்ட சமயங்களில் கற்பூரவள்ளி செடியின் இலை சாற்றின் சில துளிகளை உள்ளுக்கு அருந்தினால் அஜீரண கோளாறுகள் நீங்கும். நெஞ்செரிச்சல் உணர்வும் போகும்.

    MORE
    GALLERIES

  • 79

    கிட்னி கல்.. சைனஸ் சளி பிரச்னை.. கற்பூரவல்லி இலையில் கொட்டிக்கிடக்கும் ஆரோக்கிய பயன்கள்.!

    சிறுநீரகங்கள் நமது ரத்தத்தில் உள்ள அதிகப்படியான உப்புகள் மற்றும் இதர பொருட்களை சுத்திகரித்து, அக்கழிவுகளை சிறுநீர் வழியாக நமது உடலில் இருந்து வெளியேற்றுகிறது. கற்பூரவள்ளி செடிகளின் இலைகள் சிறுநீரை அதிகம் பெருக்கும் தன்மை கொண்டது. இது சிறுநீரகங்களில் அதிகளவில் சேரும் உப்புகளை கரைத்து சிறுநீரகங்களின் நலனை காக்கிறது.

    MORE
    GALLERIES

  • 89

    கிட்னி கல்.. சைனஸ் சளி பிரச்னை.. கற்பூரவல்லி இலையில் கொட்டிக்கிடக்கும் ஆரோக்கிய பயன்கள்.!

    கற்பூரவள்ளி இலையிலுள்ள நார்ச்சத்து இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவை கட்டுப்பாட்டுக்குள் வைப்பதற்கு உதவுகிறது. தினமும் கற்பூரவள்ளி இலையினை சாப்பிட்டு வந்தால் நம்முடைய உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கவும் உதவும். கற்பூரவள்ளி இலை வாந்தி, குமட்டல் போன்ற பிரச்சனைகளுக்கும் மருந்தாக பயன்படுகிறது.

    MORE
    GALLERIES

  • 99

    கிட்னி கல்.. சைனஸ் சளி பிரச்னை.. கற்பூரவல்லி இலையில் கொட்டிக்கிடக்கும் ஆரோக்கிய பயன்கள்.!

    தலையில் காணப்படும் நரை முடியினை கருப்பாக மாற்றுவதற்கு கற்பூரவள்ளி இலையில் இருந்து கிடைக்கக்கூடிய பேஸ்ட் பயன்படுத்தப்படுகிறது. அதுமட்டும் இல்லாமல் முகத்தில் காணப்படும் பருக்களை நீக்கவும் மற்றும் பொலிவு இழந்து காணப்படும் முகத்தினை பொலிவு பெற செய்யவும் கற்பூரவள்ளி இலை பயன்படுகிறது.

    MORE
    GALLERIES