குளிர்ந்த மோர் கோடை காலத்திற்கான ஒரு இனிமையான பானம். காலம் காலமாக கோடைகாலத்தில் பருகும் அருமையான பானம் இது. இது எண்ணற்ற நன்மைகளையும் கொண்டுள்ளது. பாலில் இருந்து வெண்ணையை பிரித்தெடுத்த பின்னர், மீதம் உள்ள நீரைத் தான் மோர் என்கிறோம். தயிரில் நீர் கலந்து கரைத்தும் செய்யலாம். சந்தைகளில் பலவகையான மோர் கிடைக்கிறது. நம் உடலுக்கு எந்தவிதமான பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாமல், தாகத்தை தனித்து உடலின் நீர்ச்சத்தை தக்கவைக்கும் மோரின் நம்பமுடியாத மருத்து குணங்கள் பற்றி இங்கே காணலாம்.