முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆவாரம் பூ டீ : எப்படி போட வேண்டும் தெரியுமா..?

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆவாரம் பூ டீ : எப்படி போட வேண்டும் தெரியுமா..?

உடல் சூடு, பித்தம், மாதவிடாயின் போது அதிக இரத்தப்போக்கு , ஒழுங்கற்ற மாதவிடா, குடல் புண் இப்படி பல்வேறு வகையான பிரச்னைகளுக்கும் ஆவாரம் பூ மருந்தாக இருக்கிறது.

  • 15

    நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆவாரம் பூ டீ : எப்படி போட வேண்டும் தெரியுமா..?

    ஆவாரம் பூ நாட்டு வைத்தியங்களுக்கு அதிகம் பயன்படுத்தப்படும். குறிப்பாக சர்க்கரை நோயாளிகளுக்கு இன்சுலின் அளவு சீராக இருக்க ஆவாரம் பூ பயன்படுத்துவார்கள். அதோடு பல்வேறு நோய்களுக்கும் தீர்வாக இருக்கிறது.

    MORE
    GALLERIES

  • 25

    நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆவாரம் பூ டீ : எப்படி போட வேண்டும் தெரியுமா..?

    ஆவாரம் பூக்களைநன்கு வெயிலில் காய வைத்து அதை பொடி செய்து நீரில் கலந்து குடிப்பார்கள். இதனால் உடல் சூடு, பித்தம், மாதவிடாயின் போது அதிக இரத்தப்போக்கு , ஒழுங்கற்ற மாதவிடா, குடல் புண் இப்படி பல்வேறு வகையான பிரச்னைகளுக்கும் ஆவாரம் பூ மருந்தாக இருக்கிறது.

    MORE
    GALLERIES

  • 35

    நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆவாரம் பூ டீ : எப்படி போட வேண்டும் தெரியுமா..?

    அதோடு உடலின் நச்சு நீக்கியாக செயல்படுவதோடு பெண்களுக்கு எண்ணற்ற நன்மைகளை அளிக்கிறது. இதை சுடு தண்ணீரில் கொதிக்க வைத்து தினம் ஒரு கிளாஸ் குடித்து வர வெள்ளைப்படுதல் இருக்காது, கருப்பை ஆரோக்கியம் கிடைக்கும். நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகமாக இருக்கும்.

    MORE
    GALLERIES

  • 45

    நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆவாரம் பூ டீ : எப்படி போட வேண்டும் தெரியுமா..?

    கிராமங்களில் மட்டுமே அதிகம் கிடைக்கக் கூடிய இந்த ஆவாரம் பூக்களை நாட்டு மருந்து கடைகளிலும் வாங்கலாம். காய்ந்த பூக்களாகவும் கிடைக்கும் அல்லது பொடியாகவும் கிடைக்கும். காய்ந்த பூக்களை அரைத்து பொடி செய்து கொள்ளுங்கள் அல்லது அப்படியேவும் கொதிக்க வைக்கலாம். ஃபிரெஷான பூவாக கிடைத்தாலும் அதை காய வைத்து பயன்படுத்தலாம்.

    MORE
    GALLERIES

  • 55

    நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆவாரம் பூ டீ : எப்படி போட வேண்டும் தெரியுமா..?

    ஆவாரம் பூ டீ போட முதலில் பாத்திரத்தில் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி கொதிக்க வையுங்கள்.கொதி நிலைக்கு வரும்போது ஆவாரம் பூக்களை சேர்த்து கொதிக்க வையுங்கள். பின் அதை வடிகட்டி பருகலாம். தேவைப்பட்டால் அதில் மலைத்தேன் சேர்த்து குடிக்கலாம். சர்க்கரை நோய் உள்ளவர்கள் தேன் சேர்க்காமல் அப்படியே குடிக்க வேண்டும்.பொடியாக கிடைத்தாலும் அதை கொதிக்க வைத்தே வடிகட்டி பருகலாம்.

    MORE
    GALLERIES