முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » சிக்கனை சமைக்கும் முன் இப்படி கழுவாதீங்க... உயிருக்கே ஆபத்தாகலாம்..!

சிக்கனை சமைக்கும் முன் இப்படி கழுவாதீங்க... உயிருக்கே ஆபத்தாகலாம்..!

சமைக்கும் முன் சிக்கனை கழுவக் கூடாது என உலகெங்கிலும் உள்ள உணவு பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் கட்டுப்பாட்டாளர்கள் கூறுகிறார்கள். அவ்வாறு சமைப்பது உயிருக்கே ஆபத்தாக மாறும் என்றும் எச்சரிக்கின்றனர்.

  • 19

    சிக்கனை சமைக்கும் முன் இப்படி கழுவாதீங்க... உயிருக்கே ஆபத்தாகலாம்..!

    பொதுவாக எந்த உணவுப் பொருளையும் சமைக்கும் முன் சுத்தமாக கழுவிய பின் சமையலில் சேர்க்க வேண்டும் என்பார்கள். அதுதான் சுத்தமாக சமைக்கும் முறையும் கூட. ஆனால் இந்த செய்தி பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தலாம்.

    MORE
    GALLERIES

  • 29

    சிக்கனை சமைக்கும் முன் இப்படி கழுவாதீங்க... உயிருக்கே ஆபத்தாகலாம்..!

    ஆம்... சமைக்கும் முன் சிக்கனை கழுவக் கூடாது என உலகெங்கிலும் உள்ள உணவு பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் கட்டுப்பாட்டாளர்கள் கூறுகிறார்கள். அவ்வாறு சமைப்பது உயிருக்கே ஆபத்தாக மாறும் என்றும் எச்சரிக்கின்றனர்.

    MORE
    GALLERIES

  • 39

    சிக்கனை சமைக்கும் முன் இப்படி கழுவாதீங்க... உயிருக்கே ஆபத்தாகலாம்..!

    The Conversation இன் அறிக்கையின்படி, உலகெங்கிலும் உள்ள உணவுப் பாதுகாப்பு அதிகாரிகளும் கட்டுப்பாட்டாளர்களும் சமைக்கும் முன் பச்சையாக இருக்கும் கோழி இறைச்சியை கழுவ வேண்டாம் என்று பரிந்துரைக்கின்றனர். சிக்கனை கழுவினால், சமையலறையைச் சுற்றி ஆபத்தான பாக்டீரியாக்கள் பரவக்கூடும் என்பதால் அவ்வாறு செய்வது தவறான முறை என்கின்றனர். அதற்கு பதிலாக சிக்கனை கழுவாமல் நன்றாக சமைப்பது சிறந்தது. அதுவே பாதுகாப்பான வழியாக கருதப்படுகிறது.

    MORE
    GALLERIES

  • 49

    சிக்கனை சமைக்கும் முன் இப்படி கழுவாதீங்க... உயிருக்கே ஆபத்தாகலாம்..!

    சிக்கனை கழுவுவது ஒரு பொதுவான நடைமுறையாகும். ஆஸ்திரேலியாவின் உணவு பாதுகாப்பு தகவல் கவுன்சில் நடத்திய ஆய்வில், ஆஸ்திரேலிய குடும்பங்களில் பாதி பேர் சிக்கனை சமைப்பதற்கு முன்பு கழுவுகிறார்கள் என்று காட்டுகிறது. 25% நுகர்வோர் சிக்கனை அடிக்கடி கழுவுவதாக டச்சு ஆராய்ச்சி கண்டறிந்துள்ளது.

    MORE
    GALLERIES

  • 59

    சிக்கனை சமைக்கும் முன் இப்படி கழுவாதீங்க... உயிருக்கே ஆபத்தாகலாம்..!

    சிக்கனை கழுவ என்ன காரணம்..? உணவில் பரவும் நோய்க்கான இரண்டு முக்கிய காரணங்கள் கேம்பிலோபாக்டர் (காம்பிலோபாக்டர்) மற்றும் சால்மோனெல்லா (சால்மோனெல்லா) ஆகிய பாக்டீரியாக்கள்தான். அவை பொதுவாக கோழி இறைச்சிகளில் காணப்படுகின்றன. சிக்கனை கழுவும்போது அந்த பாக்டீரியாக்கள் சமையலறையில் எல்லா இடங்களிலும் பரவுகின்றன. இதன் காரணமாக நோய்களின் ஆபத்து அதிகரிக்கிறது.

    MORE
    GALLERIES

  • 69

    சிக்கனை சமைக்கும் முன் இப்படி கழுவாதீங்க... உயிருக்கே ஆபத்தாகலாம்..!

    ஆஸ்திரேலியாவில், கடந்த இரண்டு தசாப்தங்களில் கேம்பிலோபாக்டர் மற்றும் சால்மோனெல்லாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட இரட்டிப்பாகியுள்ளன. வருடத்திற்கு 220,000 கேம்பிலோபாக்டர் நோய்த்தொற்றுகள் ஏற்படுகின்றன, 50,000 கோழி இறைச்சியிலிருந்து நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பாதிக்கப்படுகின்றனர்.

    MORE
    GALLERIES

  • 79

    சிக்கனை சமைக்கும் முன் இப்படி கழுவாதீங்க... உயிருக்கே ஆபத்தாகலாம்..!

    சிக்கனை கழுவிய தண்ணீரிலிருந்து அந்த ஆய்வு நடத்தப்பட்டபோது இந்த ஆபத்து கண்டறியப்பட்டுள்ளது. அவ்வாறு ஆய்வு செய்தபோது அந்த நீர் துளிகள் மூலம் சமையலறை சிங்க் பகுதிகளை சுற்றிலும் இந்த பாக்ட்டீரியாக்கள் பாரவுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதை நிரூபித்துள்ளது.

    MORE
    GALLERIES

  • 89

    சிக்கனை சமைக்கும் முன் இப்படி கழுவாதீங்க... உயிருக்கே ஆபத்தாகலாம்..!

    குறிப்பாக நீர்த்துளிகள் சிதறி தெறிக்கும் அமைப்புகளில் கழுவும்போது அது அதிவேகமாக மற்ற இடங்களுக்கும் தாவும் என்று கூறப்படுகிறது. அவை சிறு சிறு தேக்கங்களில் தங்கி உற்பத்தியை பெருக்கவும் செய்யலாம். இதனால் குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களுக்கு உபாதைகள் வரலாம் என்றும் எச்சரிக்கிறது.

    MORE
    GALLERIES

  • 99

    சிக்கனை சமைக்கும் முன் இப்படி கழுவாதீங்க... உயிருக்கே ஆபத்தாகலாம்..!

    மாற்று வழி..? எனவே சிக்கனை கழுவுவதற்கு பதிலாக குறைந்த வெப்ப அளவிலான கொதி நீரில் சிக்கனை கழுவலாம் . அந்த நீரில் சிக்கனை அலசி சுத்தம் செய்ய வேண்டும். அப்போது அந்த வெப்ப நீரில் கிருமிகள் அழிந்து விடும் என்றும் கூறப்படுகிறது. அந்த சுடு நீரில் கொஞ்சம் எலுமிச்சை சாறு, மஞ்சள் சேர்த்து சிக்கனை கழுவலாம். சிக்கன் கழுவிய நீரை வீட்டு சிங்க் தொட்டியிலேயே ஊற்றாமல் வெளிப்புறத்தில் ஊற்றுவது நல்லது.

    MORE
    GALLERIES