முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » காலை எழுந்தவுடன் டீ குடிப்பதில் இத்தனை ஆபத்து இருக்கா..? உஷாராக இருங்கள்..!

காலை எழுந்தவுடன் டீ குடிப்பதில் இத்தனை ஆபத்து இருக்கா..? உஷாராக இருங்கள்..!

ஒரு சிலருக்கு காலை டீ அல்லது காபி குடிக்காமல் வேலையே ஓடாது. எனினும் காலை முதல் வேலையாக டீ குடிப்பது உடல் நலத்தை மோசமாக பாதிக்கும்.

  • 111

    காலை எழுந்தவுடன் டீ குடிப்பதில் இத்தனை ஆபத்து இருக்கா..? உஷாராக இருங்கள்..!

    டீ பிரியரா நீங்கள்? காலையில் எழுந்ததும் முதல் வேலையாக டீ குடிக்கும் பழக்கம் உங்களுக்கு இருக்கா? இது உங்கள் ஆரோக்கியத்தை எவ்வாறு பாதிக்கும் என்பதற்கான நான்கு காரணங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

    MORE
    GALLERIES

  • 211

    காலை எழுந்தவுடன் டீ குடிப்பதில் இத்தனை ஆபத்து இருக்கா..? உஷாராக இருங்கள்..!

    காலை எழுந்ததும் முகத்தை கழுவி விட்டு, முதல் வேலையாக டீ குடித்துவிட்டு தான் மற்ற வேலைகளை பார்ப்பேன் என்று நீங்கள் கூறினால் இந்த பதிவு உங்களுக்கானது. காலையில் எழுந்ததும் எந்த ஒரு வேலை அல்லது உணவையும் சாப்பிடாமல் தேநீர் குடிப்பது பலருக்கு புத்துணர்ச்சி அளிக்கிறது. அந்த நாளை முன்னோக்கி எடுத்துச் செல்ல உதவியாக இருக்கிறது.

    MORE
    GALLERIES

  • 311

    காலை எழுந்தவுடன் டீ குடிப்பதில் இத்தனை ஆபத்து இருக்கா..? உஷாராக இருங்கள்..!

    இன்னும் சொல்லப்போனால் ஒரு சிலருக்கு காலை டீ அல்லது காபி குடிக்காமல் வேலையே ஓடாது. எனினும் காலை முதல் வேலையாக டீ குடிப்பது உடல் நலத்தை மோசமாக பாதிக்கும். காபின் நிறைந்த டீயை வெறும் வயிற்றில் குடிப்பது உடலுக்கு அசோகரித்தை ஏற்படுத்தும்.

    MORE
    GALLERIES

  • 411

    காலை எழுந்தவுடன் டீ குடிப்பதில் இத்தனை ஆபத்து இருக்கா..? உஷாராக இருங்கள்..!

    காலை எழுந்தவுடன் டீ குடிக்க கூடாது என்று சொல்லப்படுவதற்கான காரணங்களை இப்போது பார்க்கலாம். தேநீரில் காணப்படும் காபின் வயிற்றில் உள்ள அமிலத்தின் உற்பத்தியை தூண்டக்கூடிய தன்மை கொண்டது. இது எரிச்சல் மற்றும் வீக்கத்தை ஏற்படுத்தும். பெட் டீ என்று சொல்லப்படும் பழக்கத்தை பல இந்தியர்கள் கடைப்பிடித்து வருகின்றனர். தேநீர் சுவையான மற்றும் ஆறுதல் அளிக்கக்கூடிய பானமாக இருந்தாலும், அதில் காபின் இருப்பதன் காரணமாக அது நம் உடலுக்கு நல்லதல்ல.

    MORE
    GALLERIES

  • 511

    காலை எழுந்தவுடன் டீ குடிப்பதில் இத்தனை ஆபத்து இருக்கா..? உஷாராக இருங்கள்..!

    கூடுதலாக காலை நேரத்தில் டீ குடிக்கும் பொழுது, அது நம் உடலில் இயற்கையாகவே உற்பத்தியாகும் கார்ட்டிசால் அளவுகளில் தலையிடுகிறது. தெரியாதவர்களுக்கு, கார்ட்டிசால் என்பது நமது தூக்கம் மற்றும் விழிப்பு சுழற்சியை ஒழுங்குப்படுத்தி, நம்மை நாள் முழுவதும் ஆற்றல் மிகுந்த நபராக மாற்றக்கூடிய ஒரு ஹார்மோன் ஆகும். காலையில் காபினை அருந்தும் பொழுது, உடலின் கார்ட்டிசால் உற்பத்தி செய்யும் தன்மை குறைகிறது. இதன் காரணமாக நீங்கள் நாள் முழுவதும் சோர்வாகவும், சோம்பேறித்தனமாகவும் உணர்வீர்கள். காலையில் தேநீர் குடிப்பதால் ஏற்படும் முக்கியமான நான்கு உடல் நல பிரச்சனைகள் என்ன என்பதை இப்போது பார்க்கலாம்.

    MORE
    GALLERIES

  • 611

    காலை எழுந்தவுடன் டீ குடிப்பதில் இத்தனை ஆபத்து இருக்கா..? உஷாராக இருங்கள்..!

    வயிற்றில் எரிச்சல் : வெறும் வயிற்றில் டீ குடிக்கும் பொழுது, அது வயிற்றில் எரிச்சலை ஏற்படுத்துகிறது. இதன் காரணமாக அசோகரியம், வயிற்று உப்புசம் மற்றும் குமட்டல் ஏற்படலாம்.

    MORE
    GALLERIES

  • 711

    காலை எழுந்தவுடன் டீ குடிப்பதில் இத்தனை ஆபத்து இருக்கா..? உஷாராக இருங்கள்..!

    நீர்ச்சத்து இழப்பு : தேநீர் ஒரு டையூரிடிக் என்பதால், டீ குடித்த உடனே அதிகப்படியான நீர்ச்சத்து உடலில் இருந்து சிறுநீர் வழியாக வெளியேற்றப்படுகிறது. அதிலும் குறிப்பாக இரவு முழுவதும் தண்ணீர் இல்லாமல் காலையில் நீர்ச்சத்து பற்றாக்குறை இருக்கக்கூடிய நேரத்தில் நீங்கள் டீ அருந்தும் பொழுது இது நிலைமையை இன்னும் மோசமாக்கும்.

    MORE
    GALLERIES

  • 811

    காலை எழுந்தவுடன் டீ குடிப்பதில் இத்தனை ஆபத்து இருக்கா..? உஷாராக இருங்கள்..!

    ஊட்டச்சத்து உறிஞ்சுதலை மோசமாக்குகிறது : டீயில் காணப்படும் டானின்கள் இரும்பு, கால்சியம் போன்ற தாதுக்களுடன் இணையும் தன்மை கொண்டது. இதன் காரணமாக நமது உடல் அந்த தாதுக்களை உறிஞ்சுவதில் சிக்கல் ஏற்படுகிறது.

    MORE
    GALLERIES

  • 911

    காலை எழுந்தவுடன் டீ குடிப்பதில் இத்தனை ஆபத்து இருக்கா..? உஷாராக இருங்கள்..!

    பற்சிதைவு : டீயில் இயற்கை அமிலங்கள் இருப்பதன் காரணமாக, அது ஈறுகளை அழித்து விடக்கூடும். குறிப்பாக அதிக அளவிலான தேநீரை நீண்ட காலத்திற்கு பருகி வரும் பொழுது பற்சிதைவு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.

    MORE
    GALLERIES

  • 1011

    காலை எழுந்தவுடன் டீ குடிப்பதில் இத்தனை ஆபத்து இருக்கா..? உஷாராக இருங்கள்..!

    ஆகவே தேநீர் குடிப்பதற்கான சிறந்த நேரம் காலை மற்றும் மதிய வேலைக்கு இடைப்பட்ட நேரம் ஆகும். உங்கள் காலை உணவை முடித்த ஒரு மணி நேரத்திற்கு பிறகு டீ குடிக்கலாம். மேலும் காலையில் மோர் அல்லது ஹிமாலயன் பிங்க் சால்ட் கலந்த வெதுவெதுப்பான தண்ணீரை பருகுவது உடலுக்கு பல நன்மைகளை அளிக்கும்.

    MORE
    GALLERIES

  • 1111

    காலை எழுந்தவுடன் டீ குடிப்பதில் இத்தனை ஆபத்து இருக்கா..? உஷாராக இருங்கள்..!

    இரவு முழுவதும் தூங்கிவிட்டு காலையில் உங்கள் உடலை மறுசீரமைக்க வெந்தயம் அல்லது எலுமிச்சை நீரை கூட நீங்கள் பருகலாம். கற்றாழை சாறு, இளநீர், தேன், ஆப்பிள் சைடர் வினிகர் ஒரு சில துளிகள் சேர்க்கப்பட்ட தண்ணீர் போன்றவையும் உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய காலை பானங்கள் ஆகும்.

    MORE
    GALLERIES