காரமான மசாலா உணவுகள் நம் உடலுக்கு பெரும்பாலும் ஆரோக்கியமானவை தான். பல நூற்றாண்டுகளாக இவற்றின் மருத்துவ தன்மைக்காகவும் சுவைக்காகவும் அறியப்பட்டு வருகின்றன. பெரும்பாலான இந்தியர்களின் உணவு வகைகளின் மிளகாய் இடம்பெறாமல் இருக்காது. என்ன விதமான உணவுப்பொருள் சமைத்தாலும் பெரும்பாலான நேரங்களில் அவற்றில் மிளகாய்த்தூள் பயன்படுத்தியே நாம் உணவுப் பொருட்களை தயார் செய்வோம்.
அவ்வாறு நாம் அடிக்கடி பயன்படுத்தும் மசாலா பொருட்களில் முக்கியமானது தான் சிவப்பு மிளகாய். நாடு முழுவதுமே பல விதமான உணவு வகைகளை தயாரிப்பதற்கு சிவப்பு மிளகாய்த்தூள் பயன்படுகிறது. மிளகாயை நன்றாக காய வைத்து பிறகு தூளாக அரைத்து மிளகாய் பொடி தயார் செய்யப்படுகிறது. இந்த சிவப்பு மிளகாய் தூளானது செரிமானத்திற்கும் உடல் எடையை கட்டுக்கோப்பாக வைப்பதற்கும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கும், ரத்த நாளங்களை இலகுவாக்குவதற்கும் உதவுகிறது. இதுபோல சிகப்பு மிளகாய் பயன்படுத்துவதால் கிடைக்கும் 7 நன்மைகளைப் பற்றி பார்ப்போம்.
செரிமானத்திற்கு உதவுகிறது: சிவப்பு மிளகாய் நமது செரிமான திறனை அதிகரிக்க உதவுகிறது. மேலும் மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்களுக்கு அதில் இருந்து நிவாரணம் அளிக்கவும் இது பயன்படுகிறது. ஆனால் அதிக அளவு சிவப்பு மிளகாய் தூளை நாம் உணவில் பயன்படுத்தும் போது அவை வயிற்றுப்போக்கு ஏற்படுத்தும் அபாயம் உள்ளது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.