மூளை நரம்புகளில் அடினோசினின் ஆதிக்கத்தைக் காஃபீன் குறைப்பதால் மனஅழுத்தம் குறையும் என்றும் அவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். ஆனால் அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு என்பது போல அதிகப்படியான காபி என்றைக்குமே உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும். காபி இல்லாமல் எந்த வேலைகளையும் செய்ய முடியாது என்றால், காபி எந்த அளவு அருந்த வேண்டும், எப்போது அருந்த வேண்டும், வெறும் வயிற்றில் காபி குடிப்பது நல்லதா போன்றவற்றை காபி பிரியர்கள் அறிந்து வைத்திருப்பது மிகவும் நல்லது.
இன்றைய காலக்கட்டத்தில் காஃபிக்களில் செயற்கை காஃபின் சேர்க்கப்படுகிறது. இந்த காஃபின் மருந்து உடலின் வளர்சிதை மாற்ற செயல்முறையை பல வழிகளில் பாதிக்கிறது. காஃபின் உடலின் மத்திய நரம்பு மண்டலத்தைத் தூண்டுகிறது இதனால் ஒருவரை ஆற்றலுடன் உணர வைக்கிறது. எனவே அதிகப்படியான காஃபின் உட்கொள்வது தூக்கமின்மை, உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதய பிரச்சினைகள் ஆகியவற்றின் அபாயத்தை அதிகரிக்கிறது. எனவே, உங்கள் தினசரி மூன்று முறைக்கு மேல் காஃபி பருகாமல் இருப்பது உடல் ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும்.
நீங்கள் காபி அருந்துபவராக இருப்பின், போதுமான அளவு தண்ணீர் குடிப்பது மிகவும் முக்கியமானது. ஏனெனில் காபி குடிப்பதன் விளைவாக உங்கள் உடல் அதிக சிறுநீரை உற்பத்தி செய்யலாம், இது உடலில் நீர் சத்து குறைபாட்டிற்கு வழிவகுக்கும். இதனால் சோர்வு, தலைவலி மற்றும் அறிவாற்றல் செயல்பாடு குறைபாடு போன்ற பலவிதமான தீங்கு விளைவிக்கும். எனவே காபி குடிப்பவர்கள் அதிக அளவில் தண்ணீர் குடிப்பது அவசியம்.
உங்கள் காபியில் அதிகப்படியான சர்க்கரை சேர்ப்பதை நிறுத்த வேண்டும். இல்லையெனில், இது இறுதியில் கொழுப்பின் அதிக திரட்சியை விளைவிக்கும், இது கொழுப்பு கல்லீரல் நோயாக உருவாகலாம் மற்றும் நீரிழிவு நோய்க்கும் பங்களிக்கிறது. மேலும், இது இதய நோய் அபாயத்தை அதிகரிக்கிறது. சூடான நீர், தேநீர் மற்றும் காபி போன்ற சூடான பானங்களை அதிகமாகவோ அதிக சூடாகவோ குடிப்பதால், உணவுக்குழாய் புற்றுநோயை உருவாக்கும் அபாயம் அதிகரிக்கும். எனவே காபியை அளவாக பருகுவது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.