பெருங்காயம் என்பது இந்தியாவில் மட்டுமல்ல பல நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக ஈரான் , ஆஃப்கானிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் நாடுகளில் கூட பெருங்காயம் சமையலுக்கு பயன்படுத்தப்படுகிறது. இப்படி பெருங்காயத்தால் கிடைக்கும் நன்மைகள் காரணமாக அதன் பயன்பாடு அதிகரித்திருப்பதால் அதை இறக்குமதி செய்வதில் பல சிரமங்கள் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. அதில் இந்தியாவும் அடங்கும்.
பெருங்காயத் தண்ணீர் எப்படி உருவாக்க வேண்டும்..? ஒரு கிளாஸ் வெதுவெதுப்பாக தண்ணீர் எடுத்துக்கொள்ளுங்கள். பின் அதில் அரை ஸ்பூன் பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு கலந்துகொள்ளுங்கள். பின் அதை பருகலாம். காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் கூடுதல் நன்மைகள் கிடைக்கும். இப்படி குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன..? ( குறிப்பு : ஒருவேளை உங்களுக்கு தண்ணீர் கலந்து குடிக்க பிடிக்கவில்லை எனில் மோரில் கலந்து குடிக்கலாம்.)