வீட்டில் ஏதாவது விசேஷம் என்றால் குலோப் ஜாமுன் மாவை வாங்கி உடனடியாக செய்ய ஆரம்பித்து விடுவோம். ஆனால் இனி அந்த இன்ஸ்டன்ட் மாவு கூட இல்லாமல் நம் வீட்டில் இருக்கும் இந்த பிரெட் மட்டும் வைத்தே ஒரு சூப்பரான சாஃப்ட்டான குலோப் ஜாமுன் செய்ய முடியும். பிரெட் குலோப் ஜாம் எப்படி செய்வது என்று இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்.
இதற்கிடையே, குலாப் ஜாமூனுக்கு தேவையான சர்க்கரை பாகு தயார் செய்து கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, அதில் சர்க்கரை சேர்த்து கலக்கவும். இதை நன்றாக கொதிக்க வைத்து, சர்க்கரை நன்றாக கரையும்படி செய்ய வேண்டும். கரைந்த பிறகு, தீயை சற்று குறைத்து, இந்த கலவை கெட்டியாக வரும் வரை வைத்திருக்கவும். சரியான பதம் கிடைத்தவுடன் அடுப்பை அணைத்து விடவும்.
அதன் பிறகு பிசைந்து வைத்திருந்த மாவை எடுத்து, சிறு, சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ள வேண்டும். இப்போது கடாயில் எண்ணெய் ஊற்றி சூடேற்றவும். இந்த உருண்டைகளை நல்ல பொன்னிறமாக வரும் வரை வேக வைத்து எடுக்கவும். பொறித்த உருண்டைகளை, தூய்மையான வெள்ளைத் தாளில் ஒட்டி எடுத்து, அதில் இருந்து எண்ணெய்யை பிரித்து எடுக்கவும்.
இப்போது ஏற்கனவே காய்ச்சி வைத்திருந்த சர்க்கரை பாகில், இந்த உருண்டைகளை சேர்த்து மீண்டும் லேசாக சூடேற்றவும். பின்னர் அதனை ஒரு மணி நேரம் இந்த சர்க்கரைப் பாகில் ஊற வைக்க வேண்டும். சர்க்கரை பாகில் ஊறிய பிறகு உருண்டைகள் நல்ல சாஃப்ட்டாகவும், ஸ்வீட்டாகவும் மாறி விடும். இப்போது, பிரெட் குலோப் ஜாமூன் ரெடி.