முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » நெல்லிக்காய் ஜூஸ் ஏன் ஆரோக்கியத்திற்கு நல்லது.? இந்த 4 காரணங்களை தெரிஞ்சுக்கோங்க..!

நெல்லிக்காய் ஜூஸ் ஏன் ஆரோக்கியத்திற்கு நல்லது.? இந்த 4 காரணங்களை தெரிஞ்சுக்கோங்க..!

செரிமான கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கும், அசிடிட்டி மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்னைக்களுக்கு இந்த ஜூஸ் மருந்தாக செயல்படுகிறது.

  • 17

    நெல்லிக்காய் ஜூஸ் ஏன் ஆரோக்கியத்திற்கு நல்லது.? இந்த 4 காரணங்களை தெரிஞ்சுக்கோங்க..!

    உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்க அன்றாட வாழ்வில் சிறந்த உணவு முறையை பின்பற்றுகிறோம். அந்த ஆரோக்கியத்தை முழுமையான பெற பழங்கள், காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொண்டால் மட்டும் போதாது, அதனை எப்படி சாப்பிட வேண்டும் என்றும் எதனுடன் சாப்பிட வேண்டும் என்பதும் முக்கியமாக உள்ளது. அந்த வகையில் உடலுக்கு அதிக அளவிலான ஆரோக்கியத்தை தரும் ஆம்லா அர்ஜுனா ஜூஸ் எனப்படும் நெல்லிக்காய் மற்றும் மருத மரப்பட்டைகளை பயன்படுத்தி செய்யப்படும் ஜூஸ் பற்றி பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்புகள் இல்லை என்று தான் கூற வேண்டும். இந்த ஜூஸை எவ்வாறு தயாரிப்பது என்பதை பற்றியும் அதன் நன்மைகளைப் பற்றியும் இந்த பதிவில் பார்ப்போம்.

    MORE
    GALLERIES

  • 27

    நெல்லிக்காய் ஜூஸ் ஏன் ஆரோக்கியத்திற்கு நல்லது.? இந்த 4 காரணங்களை தெரிஞ்சுக்கோங்க..!

    இதயத்தின் ஆரோக்கியத்தை அதிகப்படுத்துகிறது :  நெல்லிக்காய் மற்றும் மருத மரப்பட்டைகளை பயன்படுத்தி செய்யப்படும் இந்த ஜூஸ் நமது இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள பல வழிகளில் உதவுகிறது. ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைப்பதில் இருந்து உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்புகளை நீக்குவது வரை பலவித நன்மைகளை செய்கிறது. இதில் உள்ள அர்ஜுன்ஜெனின், அர்ஜுனாலிக் அமிலம் மற்றும் பாலி பெனால்ஸ் ஆகியவை இதய தசைகளை வலுப்படுத்துகின்றன. இதன் மூலம் உடல் உறுப்புகளுக்கு ரத்த ஓட்டம் அதிகரிப்பதோடு, உடலுக்கு கெடுதல் செய்யும் கொழுப்புக்களையும் குறைக்க உதவுகிறது.

    MORE
    GALLERIES

  • 37

    நெல்லிக்காய் ஜூஸ் ஏன் ஆரோக்கியத்திற்கு நல்லது.? இந்த 4 காரணங்களை தெரிஞ்சுக்கோங்க..!

    நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது: இந்த அர்ஜுன் ஆம்லா ஜூஸில் உள்ள நெல்லிக்காய்  சாறு இயற்கையாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மை உடையது. இதில் அதிகப்படியாக உள்ள வைட்டமின் சி உடலை வலுவாக்குவதற்கும், நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு உள்ளவர்களுக்கு அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கும் மிகுந்த பயனுள்ளதாக உள்ளது.

    MORE
    GALLERIES

  • 47

    நெல்லிக்காய் ஜூஸ் ஏன் ஆரோக்கியத்திற்கு நல்லது.? இந்த 4 காரணங்களை தெரிஞ்சுக்கோங்க..!

    செரிமானத்திற்கு உதவுகிறது: செரிமான கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கும், அசிடிட்டி மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்னைகளால் அவதிப்படுபவர்களுக்கும் ஆம்லா அர்ஜுன் ஜூஸ் மிகவும் உதவியாக இருக்கும். வீட்டிலேயே இந்த ஜூஸை தயாரித்து சேமித்து வைத்து பிறகு பயன்படுத்திக் கொள்ளலாம். பாட்டில் அடைக்கப்பட்ட ஜூசை பயன்படுத்தினால் 30எம்எல் அளவில் ஒரு கிளாசில் ஊற்றிக் கொண்டு, பிறகு அதன் மீதமுள்ள முக்கால் பகுதியில் மிதமாக சூடாக்கப்பட்ட நீரை ஊற்றி வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.

    MORE
    GALLERIES

  • 57

    நெல்லிக்காய் ஜூஸ் ஏன் ஆரோக்கியத்திற்கு நல்லது.? இந்த 4 காரணங்களை தெரிஞ்சுக்கோங்க..!

    சரும ஆரோக்கியத்திற்கு உதவுகிறது: இந்த ஜூஸை தினசரி குடிப்பதால் நம்முடைய சருமத்தை மிகவும் பளபளப்பாகவும், தெளிவாகவும் வைத்துக்கொள்ள உதவுகிறது. மேலும் அழற்சி எதிர்ப்பு விளைவுகளினால் உண்டாகும் பாதிப்புகளை சரி செய்யவும் நெல்லிக்காய் ஜூஸ் உதவுகிறது.

    MORE
    GALLERIES

  • 67

    நெல்லிக்காய் ஜூஸ் ஏன் ஆரோக்கியத்திற்கு நல்லது.? இந்த 4 காரணங்களை தெரிஞ்சுக்கோங்க..!

    ஆம்லா அர்ஜுன் ஜூஸ் முறை : தேவையான பொருட்கள்: நெல்லிக்காய் - ஒரு கப், மருத மரப்பட்டை - ஒரு துண்டு, தேன் - ஒரு டீஸ்பூன், தண்ணீர் - இரண்டு கப். செய்முறை: முதலில் நெல்லிக்காயை நன்றாக கழுவி அதனை துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு அதனை நன்றாக அரைத்து ஒரு மஸ்லின் துணியை எடுத்து ஜூஸை வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். குறைந்தபட்சம் 20 மில்லி லிட்டர் அளவிலான ஜூஸ் ஆவது வரும் வரை நீங்கள் அதனை பிழிய வேண்டும்.

    MORE
    GALLERIES

  • 77

    நெல்லிக்காய் ஜூஸ் ஏன் ஆரோக்கியத்திற்கு நல்லது.? இந்த 4 காரணங்களை தெரிஞ்சுக்கோங்க..!

    பிறகு இரண்டு கப் அளவில் நீரை எடுத்து கொண்டு அடுப்பின் தீயை அதிகமாக வைத்து சூடாக்க வேண்டும். இப்போது அதனுடன் நாம் எடுத்து வைத்துள்ள மருத மர பட்டைகளையும் சேர்த்து நீரானது பாதி அளவு குறையும் வரை கொதிக்க வைக்க வேண்டும். இப்போது அந்த நீரை எடுத்து நம் ஏற்கனவே சேகரித்து வைத்துள்ள நெல்லிக்காய் ஜூஸுடன் சேர்த்து கலக்க வேண்டும். அதனோடு தேனையும் கலந்து ஆறவிட்டபின் பருகலாம். இதனை மிதமான சூட்டுடைய நீருடன் கலந்து குடிப்பது இன்னும் அதிக நன்மைகளை கொடுக்கும்.

    MORE
    GALLERIES