முகப்பு » புகைப்பட செய்தி » மழைக்காலத்தில் வரும் சளித்தொல்லை... இந்த உணவுகளை சாப்பிட்டு வர தீர்வு கிடைக்கும

மழைக்காலத்தில் வரும் சளித்தொல்லை... இந்த உணவுகளை சாப்பிட்டு வர தீர்வு கிடைக்கும

ஆரம்பத்திலேயே தடுக்க அல்லது சளி வந்துவிட்டாலும் சரி உணவில் உள்ள வைட்டமின்கள், மினரல்கள், நோய் எதிர்ப்பு பண்புகள் மூலமாகவே சரி செய்துவிடலாம்.

  • 16

    மழைக்காலத்தில் வரும் சளித்தொல்லை... இந்த உணவுகளை சாப்பிட்டு வர தீர்வு கிடைக்கும

    மழைக்காலம் வந்துவிட்டாலே பருவநிலை மாற்றம், குளிர்ந்த காற்று, ஈரப்பதம், தொற்று போன்ற காரணங்களால் சளித்தொல்லை வந்துவிடும். இதை ஆரம்பத்திலேயே தடுக்க அல்லது சளி வந்துவிட்டாலும் சரி உணவில் உள்ள வைட்டமின்கள், மினரல்கள், நோய் எதிர்ப்பு பண்புகள் மூலமாகவே சரி செய்துவிடலாம். அவை என்னென்ன உணவுகள் என்று பார்க்கலாம்.

    MORE
    GALLERIES

  • 26

    மழைக்காலத்தில் வரும் சளித்தொல்லை... இந்த உணவுகளை சாப்பிட்டு வர தீர்வு கிடைக்கும

    தேன் : தேன் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. முன்னோர்கள் காலத்திலிருந்தே பயன்படுத்தப்பட்டு வரும் அதிமருந்து. எனவே காலையில் எழுந்ததும் வெதுவெதுப்பான தண்ணீரில் தேன் மற்றும் எலுமிச்சை சாறு பிழிந்து குடித்து வாருங்கள்.

    MORE
    GALLERIES

  • 36

    மழைக்காலத்தில் வரும் சளித்தொல்லை... இந்த உணவுகளை சாப்பிட்டு வர தீர்வு கிடைக்கும

    ஓட்ஸ் : ஓட்ஸ் பல வகையான ஹெல்தி காய்கறிகள், பழங்களுடன் சேர்த்து சாப்பிட சிறந்த உணவு. ஓட்ஸில் நார்ச்சத்தும் நிறைவாக உள்ளது. இதய ஆரோக்கியத்திற்கு நல்லது. வயிறு தொடர்பான பிரச்னைகளுக்கும் ஓட்ஸ் சிறந்த உணவாக இருக்கிறது. எனவே காலை உணவுக்கு ஓட்ஸ் தேர்வு செய்வது நல்லது.

    MORE
    GALLERIES

  • 46

    மழைக்காலத்தில் வரும் சளித்தொல்லை... இந்த உணவுகளை சாப்பிட்டு வர தீர்வு கிடைக்கும

    சிக்கன் சூப் : ஒரு பவுல் நிறைய சிக்கன் சூப் பெப்பர் தூவி சாப்பிடுவது சளி, இறுமல் , தொண்டை கரகரப்பிற்கு சிறந்த உணவாக இருக்கும். சிக்கனில் உள்ள புரோட்டீன், விட்டமின்கள், மினரல்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். காய்ச்சல் இருந்தாலும் சூடாக வீட்டிலேயே சிக்கன் சூப் செய்து சாப்பிடுவது நல்லது.

    MORE
    GALLERIES

  • 56

    மழைக்காலத்தில் வரும் சளித்தொல்லை... இந்த உணவுகளை சாப்பிட்டு வர தீர்வு கிடைக்கும

    பச்சை காய்கறிகள் : பசலைக்கீரை, அரைக்கீரை, புரக்கோலி, குடைமிளகாய் போன்ற காய்கறிகளை தினமும் மதிய உணவுடன் சேர்த்துக்கொள்ளுங்கள். சூப் வைத்து குடிக்கலாம். சாலட் செய்து சாப்பிடலாம். இதனால் உங்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். நார்ச்சத்தும் கிடைக்கும்.

    MORE
    GALLERIES

  • 66

    மழைக்காலத்தில் வரும் சளித்தொல்லை... இந்த உணவுகளை சாப்பிட்டு வர தீர்வு கிடைக்கும

    இஞ்சி : குளிர்காலத்தில், மழைக்காலத்தில் இஞ்சியை அப்படியே சாப்பிடுவது மிகவும் நல்லது. அப்படி சாப்பிட பிடிக்கவில்லை எனில் தினமும் குடிக்கும் டீயில் இஞ்சி சேர்க்கலாம். சூப் செய்யும்போது சேர்த்து குடிக்கலாம். இதில் சளி, இறுமல் போன்றவற்றிற்கான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. காலையில் வெறும் வயிற்றில் கூட இஞ்சியை சாப்பிடலாம்.

    MORE
    GALLERIES