கீரை வகைகள் : கீரைகள் என்ன தான் ஊட்டச்சத்து நிறைந்த உணவாக இருந்தாலும் அதனை சமைக்காமல் சாப்பிடுவது ஏராளமான பிரச்னைகளைத் தரும். ஆகையால், கீரைகளை ஒரு போதும் சமைக்காமல் சாப்பிடக்கூடாது. கீரைகளில் உடலுக்கு கேடு தரும் அதிக ஆக்சலேட் அளவுகள் காணப்படுகிறது. கீரைகளை சமைக்கும் பொழுது இந்த அளவானது குறைகிறது.
முட்டைக்கோஸ், காலிஃப்ளவர், ப்ரோக்கோலி... முட்டைக்கோஸ், காலிஃப்ளவர், ப்ரோக்கோலி போன்ற இந்த வகையான க்ருசிஃபரஸ் காய்கறிகளில் நோய் கிருமிகள் காணப்படுகிறது. காலிஃப்ளவரில் புழுக்கள் இருப்பதை நீங்கள் கவனித்து இருக்கலாம். பொதுவாக நாம் காலிஃபிளவரை சுடு நீரில் போட்ட பிறகே பயன்படுத்துவோம். எனவே, க்ருசிஃபரஸ் காய்கறிகளை சமைக்காமல் சாப்பிடக்கூடாது. அதோடு இந்த காய்கறிகளை சமைக்காமல் சாப்பிடுவது செரிமான பிரச்சினைகளை உண்டாக்கும்.
முளைக்கட்டிய பயிர்கள் : முளைக்கட்டிய பயிர்களை பச்சையாக சாப்பிட நம்மில் பலருக்கு பிடிக்கும். ஆனால் அவ்வாறு செய்வது தவறு. ஏனெனில், முளைக்கட்டிய பயிர்களில் பாக்டீரியாக்கள் இருக்கலாம். அதோடு முளைக்கட்டிய பயிர்களை சமைக்காமல் சாப்பிடும் போது, அதனை ஜீரணிப்பது கடினமாகிறது. ஆனால் முளைக்கட்டிய பயிர்களை சமைத்துவிட்டால் அதில் உள்ள வைட்டமின் சி குறைந்துவிடுமே என்று நீங்கள் கேட்கலாம். எனவே முளைக்கட்டிய பயிர்களை சாப்பிடும் போது, அவற்றுடன் எலுமிச்சை சாறு, தக்காளி போன்றவற்றை சேர்த்து சாப்பிடுவது பலன் தரும்.