கொத்தமல்லி விதைகளில் உள்ள அதிகப்படியான ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், கண்களில் ஏற்படும் அரிப்பு, அழற்சி மற்றும் கண் சிவத்தல் போன்றவற்றை சரியாக்க பயன்படுகிறது. கொத்தமல்லி விதை ஊற வைத்த நீர் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தக்கூடிய தன்மை இதில் உள்ளது. அதனால் சர்க்கரை நோய் உள்ளவர்கள் இந்த தண்ணீரை தினமும் குடிக்கலாம்.
சில பெண்கள் வெள்ளைப்படுதல் பிரச்சனைகளால் அவதிப்படுவார்கள். அவர்கள், இந்த தனியா ஊறவைத்த தண்ணீரை வாரத்தில் இரண்டு முறை குடித்து வந்தால், இந்த பிரச்சனை தீரும். 3 கிராம் தனியா விதை பொடியை 150 மிலி தண்ணீரில் கொதிக்க வைத்து குடிக்கலாம். இவ்வாறு தண்ணீரை குடிப்பதால் எலும்புகள் வலுவாகும். மேலும் எலும்பு சம்பந்தமான நோய்கள் நெருங்காது.