முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » கொத்தமல்லி விதையை தண்ணீரில் ஊற வைத்து குடித்தால் இவ்வளவு நன்மைகளா?

கொத்தமல்லி விதையை தண்ணீரில் ஊற வைத்து குடித்தால் இவ்வளவு நன்மைகளா?

coriander seed | கொத்தமல்லி விதைகளை நீரில் போட்டு கொதிக்க வைத்து இறக்கி, வடிகட்டி தேன் கலந்து குடித்து வந்தால், இரத்த சோகை பிரச்சனையில் இருந்து விரைவில் விடுபடலாம்.

  • 15

    கொத்தமல்லி விதையை தண்ணீரில் ஊற வைத்து குடித்தால் இவ்வளவு நன்மைகளா?

    கொத்தமல்லி விதைகளை நீரில் ஊற வைத்து, அந்நீரைக் குடித்து வந்தால் உடலில் உள்ள பல பிரச்சனைகளைத் தடுக்கலாம். இந்த கொத்தமல்லி விதைகளை முதல் இரவே 4 டீஸ்பூன் அளவு ஊறவைக்கவேண்டும். இதனை மறுநாள் காலையில் இந்த தண்ணீரை வெறும் வயிற்றில் குடிக்கவேண்டும்.

    MORE
    GALLERIES

  • 25

    கொத்தமல்லி விதையை தண்ணீரில் ஊற வைத்து குடித்தால் இவ்வளவு நன்மைகளா?

    கொத்தமல்லி விதைகளில் உள்ள அதிகப்படியான ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், கண்களில் ஏற்படும் அரிப்பு, அழற்சி மற்றும் கண் சிவத்தல் போன்றவற்றை சரியாக்க பயன்படுகிறது. கொத்தமல்லி விதை ஊற வைத்த நீர் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தக்கூடிய தன்மை இதில் உள்ளது. அதனால் சர்க்கரை நோய் உள்ளவர்கள் இந்த தண்ணீரை தினமும் குடிக்கலாம்.

    MORE
    GALLERIES

  • 35

    கொத்தமல்லி விதையை தண்ணீரில் ஊற வைத்து குடித்தால் இவ்வளவு நன்மைகளா?

    இரவு தூங்கும் முன் தனியா விதைகள் மற்றும் பெருஞ்சீரகம் விதைகளை குளிர்ந்த நீரில் ஊற வைத்து அந்த நீரை காலை எழுந்ததும் கண்களில் தெளித்து கழுவுங்கள். இந்த நீர் கண்களுக்கு நன்மை பயக்கும். இப்படி தினமும் செய்தால் கண்களில் தொற்று ஏற்படாது.

    MORE
    GALLERIES

  • 45

    கொத்தமல்லி விதையை தண்ணீரில் ஊற வைத்து குடித்தால் இவ்வளவு நன்மைகளா?

    மாதவிடாய் கால பிரச்சனைகள் 6 கிராம் கொத்தமல்லி விதைகளை 500 மிலி நீரில் போட்டு கொதிக்க வைத்து இறக்கி, 1 டேபிள் ஸ்பூன் தேன் கலந்து, வெதுவெதுப்பான நிலையில் குடித்து வாருங்கள். இதனால் உடலில் ஈஸ்ட்ரோஜென் என்னும் ஹார்மோன் சீராக்கப்பட்டு, மாதவிடாய்  சுழற்சி சிறப்பாக நடைபெற உதவும்.

    MORE
    GALLERIES

  • 55

    கொத்தமல்லி விதையை தண்ணீரில் ஊற வைத்து குடித்தால் இவ்வளவு நன்மைகளா?

    சில பெண்கள் வெள்ளைப்படுதல் பிரச்சனைகளால் அவதிப்படுவார்கள். அவர்கள், இந்த தனியா ஊறவைத்த தண்ணீரை வாரத்தில் இரண்டு முறை குடித்து வந்தால், இந்த பிரச்சனை தீரும். 3 கிராம் தனியா விதை பொடியை 150 மிலி தண்ணீரில் கொதிக்க வைத்து குடிக்கலாம். இவ்வாறு தண்ணீரை குடிப்பதால் எலும்புகள் வலுவாகும். மேலும் எலும்பு சம்பந்தமான நோய்கள் நெருங்காது.

    MORE
    GALLERIES