கோடையில் மக்கள் அடிக்கடி உடலில் நீரிழப்பு ஏற்பட்டது போன்றும் மற்றும் சோர்வாகவும் உணர்கிறார்கள். கோடை காலத்தில் ஏற்படும் உடல் நலப் பிரச்சனைகளில் நீர்ச்சத்து குறைபாடும் ஒன்று. எனவே இந்த வெயில் உங்களை முழுவதும் நீரேற்றமாக வைத்திருக்க வேண்டியது அவசியம். நீர்ச்சத்து நிறைந்த பழங்களை உட்கொள்வதன் மூலம் ஊட்டச்சத்து தேவைகளை பூர்த்தி செய்து உடலை ஹைட்ரேட்டாக வைத்திருக்க முடியும்.
ஆப்பிள்: இந்த பழத்தில் கரைய கூடிய நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளன. கோடையில் ஏற்பட கூடிய வெப்ப பக்கவாதம், நீரிழிவு மற்றும் புற்றுநோய் போன்ற பெரிய நோய்களின் அபாயத்தைக் குறைக்கும். குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. மேலும் ஆப்பிள்களில் நிறைந்திருக்கும் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் எலும்புகள், பற்கள் மற்றும் தோல் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.
பப்பாளி : இதில் வைட்டமின் சி, நார்ச்சத்து மற்றும் ஆன்டி-ஆக்சிடன்ட் அதிகம் உள்ளது. தமனிகளில் கொலஸ்ட்ரால் உருவாவதை தடுக்க, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி பெரிதும் உதவும். பப்பாளி சன்பர்னை தணித்து, வெயிலால் உடலில் ஏற்படும் நிற மாற்றத்தை சரி செய்கிறது. ரத்த அழுத்தத்தை குறைக்கிறது மற்றும் செரிமானத்திற்கு உதவுகிறது.