கர்நாடகம், குஜராத், அஸ்ஸாம் போன்ற மாநிலங்களில் கனமழை வெளுத்து வாங்கிக் கொண்டிருக்கிறது. ஆறுகள் எல்லாம் கரை புரண்டு ஓடத் தொடங்கியுள்ளது. கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் காவிரி நீர்வரத்தும் கூட அதிகரித்துள்ளது. ஆனால், தமிழகத்தில் ஆங்காங்கே ஒன்றிரண்டு ஊர்களில் மட்டுமே மழை எட்டிப் பார்க்கிறது. எனினும் வெகு விரைவில் பருவமழை கூடுதலாகப் பெய்யத் தொடங்கும் என்று எதிர்பார்க்கலாம். பொதுவாக மழைக்காலங்களில் காற்று மிகுந்த ஈரப்பதத்துடன் இருக்கும்.
இதனால், நமக்கு உடல் சார்ந்த உபாதைகள் ஏற்படுவதைப் போலவே வீட்டின் சமையல் அறையில் உள்ள உணவுப் பொருட்களும் பல பாதிப்புகளை எதிர்கொள்ளும். குறிப்பாக சேமித்து வைக்கப்பட்டுள்ள பருப்பு மற்றும் தானியங்களில் வண்டு பிடிக்கத் தொடங்கிவிடும். நீங்கள் எவ்வளவு தான் பாதுகாப்பாக சேமித்து வைத்திருந்தாலும் கூட, ஈரப்பதம் எப்படியாகினும் உணவுப் பொருள்களை பதம் பார்த்துவிடும். இந்தச் சூழலில் சில எளிமையான டிப்ஸ்களை பின்பற்றுவதன் மூலமாக உணவுப் பொருள்களை நாம் பாதுகாத்துக் கொள்ள முடியும்.
பூண்டு : மஞ்சளைப் போலவே பூண்டும் ஒரு வித வாசனையை கொண்டது. தானியங்களுடன் பூண்டு பல்களை போட்டு வைத்தால் அதில் வண்டு பிடிக்காது. குறிப்பாக அரிசி மற்றும் மாவுப் பொருள்களில் இதை போட்டு வைக்கலாம். அவ்வபோது பூண்டு பல்களை மாற்றுவது அவசியமானது என்பதை மறந்து விடாதீர்கள். வெயிலில் உலர வைக்கலாம்.என்னதான் மழைக்காலம் என்றாலும் அவ்வபோது சூரியன் எட்டிப் பார்க்கும் அல்லவா? அந்த சமயங்களில் தானியங்கள் மற்றும் பருப்பு வகைகளை வெயிலில் உலர வைத்து எடுத்துக் கொள்ளவும். அதில் உள்ள ஈரப்பதம் வெளியேறினால் வண்டுகளும் ஓடி விடும்.