முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » மருதாணி, நெல்லிக்காய், வேப்பிலை... முடி உதிர்வுக்கு முடிவு கட்டும் மூலிகைகள்... இப்படி யூஸ் பண்ணி பாருங்க..!

மருதாணி, நெல்லிக்காய், வேப்பிலை... முடி உதிர்வுக்கு முடிவு கட்டும் மூலிகைகள்... இப்படி யூஸ் பண்ணி பாருங்க..!

முடி உதிர்வு பிரச்சனைக்கு முடிவுகட்ட நினைத்தால், இந்த எண்ணெய்களை வீட்டிலேயே தயார் செய்து உபயோகிக்கவும்.

  • 19

    மருதாணி, நெல்லிக்காய், வேப்பிலை... முடி உதிர்வுக்கு முடிவு கட்டும் மூலிகைகள்... இப்படி யூஸ் பண்ணி பாருங்க..!

    பெரியவர், சிறியவர், ஆண்கள், பெண்கள் என வேறுபாடு இல்லாமல் அனைவரும் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று முடி உதிர்வு. முடி கொட்டுதலை கட்டுப்படுத்த நாமும் ட்ரை செய்யாத முறையே இருக்க முடியாது. சந்தைகளில் விற்பனையாகும் எண்ணெய் விளம்பரங்களை பார்த்து அவற்றையும் விட்டு வைக்காமல் முயற்சி செய்திருப்போம். ஆனால், அதற்கான பலன் நமக்கு கிடைத்திருக்காது. ஆனால், இயற்கையாக கிடைக்கும் பொருட்களை நாம் எட்டி கூட பார்ப்பதில்லை. இயற்கை நமக்கு அளித்த மூலிகைகள் யாவும் நம் ஆரோக்கியம் காக்கும் பொருட்கள் ஆகும். அந்த வகையில் நம் கூந்தல் உதிர்வதை தடுத்து, நீளமான கூந்தல் பெற உதவும் மூலிகைகள் மற்றும் அதன் பயன்களை இங்கு காணலாம்.

    MORE
    GALLERIES

  • 29

    மருதாணி, நெல்லிக்காய், வேப்பிலை... முடி உதிர்வுக்கு முடிவு கட்டும் மூலிகைகள்... இப்படி யூஸ் பண்ணி பாருங்க..!

    பாக்டீரியா எதிர்ப்பு பண்பு கொண்ட மருதாணி இலைகளை சிறிதளவு தண்ணீருடன் சேர்த்து பேஸ்ட் போல் அரைத்து கூந்தலுக்கு பயன்படுத்தி வர பொடுகு தொல்லை குறைவதோடு, கூந்தல் வளர்ச்சியும் அதிகரிக்கும். அத்துடன் இளநரை மற்றும் செம்பட்டை முடி கருமையாகும்.

    MORE
    GALLERIES

  • 39

    மருதாணி, நெல்லிக்காய், வேப்பிலை... முடி உதிர்வுக்கு முடிவு கட்டும் மூலிகைகள்... இப்படி யூஸ் பண்ணி பாருங்க..!

    அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்ட காட்டு துளசியை கூந்தலுக்கு பயன்படுத்தி வர உச்சந்தலை வறட்சி மற்றும் பொடுகுத்தொல்லை குறையும். அதேநேரம் உச்சந்தலையில் சீரான இரத்த ஓட்டம் நிகழ்ந்து, கூந்தல் வளர்ச்சியும் துரிதப்படும்.

    MORE
    GALLERIES

  • 49

    மருதாணி, நெல்லிக்காய், வேப்பிலை... முடி உதிர்வுக்கு முடிவு கட்டும் மூலிகைகள்... இப்படி யூஸ் பண்ணி பாருங்க..!

    ஆரோக்கியமான கூந்தலுக்கு பல ஆண்டு காலமாக நிபுணர்கள் பயன்படுத்தும் ஒரு இயற்கை மூலிகை பொருள் சீகைக்காய். அந்த வகையில், சீகைக்காயினை பொடியாக அரைத்து கூந்தலுக்கு பயன்படுத்தி குளிக்க நல்ல பலன் கிடைக்கும். அதில், சிறிதளவு வெந்தயம் சேர்த்து அரைத்தால் இன்னும் நல்ல பலன்களை பெறலாம்.

    MORE
    GALLERIES

  • 59

    மருதாணி, நெல்லிக்காய், வேப்பிலை... முடி உதிர்வுக்கு முடிவு கட்டும் மூலிகைகள்... இப்படி யூஸ் பண்ணி பாருங்க..!

    வைட்டமின் சி அதிகம் கொண்ட நெல்லிக்காய் கொலாஜன் உற்பத்திக்கு உதவுகிறது. எனவே, இது வலுவான மற்றும் நீளமான கூந்தல் வளர்ச்சிக்கு உதவுகிறது. தேங்காய் எண்ணையில், முழு நெல்லிக்காயை சேர்த்து கொதிக்க வைத்து தலைக்கு தேத்தி வந்தால், முடி உதிர்வு குறைந்து, முடி வளர துவங்கும்.

    MORE
    GALLERIES

  • 69

    மருதாணி, நெல்லிக்காய், வேப்பிலை... முடி உதிர்வுக்கு முடிவு கட்டும் மூலிகைகள்... இப்படி யூஸ் பண்ணி பாருங்க..!

    ரோஸ்மேரி பயன்படுத்தி தயார் செய்யப்படும் எண்ணெயினை கூந்தல் மற்றும் உச்சந்தலைக்கு தொடர்ந்து பயன்படுத்தி மசாஜ் செய்து வர கூந்தல் வளர்ச்சி அதிகரிக்கும். அதுமட்டும் அல்ல, உங்கள் கூந்தலுக்கு இயற்கையான வாசனையும் கிடைக்கும்.

    MORE
    GALLERIES

  • 79

    மருதாணி, நெல்லிக்காய், வேப்பிலை... முடி உதிர்வுக்கு முடிவு கட்டும் மூலிகைகள்... இப்படி யூஸ் பண்ணி பாருங்க..!

    ஆன்டி - ஆக்ஸிடன்கள் நிறைந்த செம்பருத்தி பூவில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் அதிகளவு காணப்படுகிறது. அந்த வகையில் இந்த செம்பருத்தி பூவினை பொடியாக அரைத்து கூந்தல் பராமரிப்பு பொருட்களுடன் சேர்த்து பயன்படுத்தி வர முடி அடர்த்தி அதிகரிக்கும்.

    MORE
    GALLERIES

  • 89

    மருதாணி, நெல்லிக்காய், வேப்பிலை... முடி உதிர்வுக்கு முடிவு கட்டும் மூலிகைகள்... இப்படி யூஸ் பண்ணி பாருங்க..!

    கற்றாழையில் புரோட்டியோலிடிக் என்சைம்கள் அதிகம் காணப்படுகின்றன. இவை, உச்சந்தலையில் காணப்படும் இறந்த செல்களை அகற்றுவதோடு, உச்சந்தலையின் ஈரப்பதத்தையும் பாதுகாக்கிறது. இதனால், முடி உதிர்வு கட்டுப்படுவதுடன், முடியின் அடர்த்தியும் அதிகரிக்கும்.

    MORE
    GALLERIES

  • 99

    மருதாணி, நெல்லிக்காய், வேப்பிலை... முடி உதிர்வுக்கு முடிவு கட்டும் மூலிகைகள்... இப்படி யூஸ் பண்ணி பாருங்க..!

    நுண்ணுயிர் எதிர்ப்பு பண்பு கொண்ட வேப்பிலை பாக்டீரியா மற்றும் பூஞ்சை தொற்றால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்கிறது. மேலும், உச்சந்தலையில் சீரான இரத்த ஓட்டத்திற்கு உதவி, தலைமுடி உதிர்வதை தடுக்கிறது.

    MORE
    GALLERIES