அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். அத்தகைய முகத்தை அழகாகவும், பொலிவாகவும் வைத்துக் கொள்ள நாம் மேற்கொள்ளும் பல முயற்சிகளில் வெற்றி பெற்றிருப்போம். ஆனால், பளபளப்பான முகத்தில் கரும்புள்ளி வைத்தாற்போல, கண்களை சுற்றியிலும் உள்ள கருவளையங்கள் மட்டும் அப்படியே நீடிக்கும். சோர்வு, போதிய தூக்கமின்மை, வயது முதிர்வு போன்ற பல காரணங்களால் கருவளையம் ஏற்படுகிறது. கண்ணை சுற்றியிலும் கரு வளையம் வந்த உடன், அதுகுறித்து பெரிய அளவுக்கு கவலைப்பட வேண்டியதில்லை. வீட்டு முறை சிகிச்சைகள் மூலமாகவே அதை விரட்டியடிக்க முடியும்.
கற்றாழை ஜெல் : ஒரு டீஸ்பூன் கற்றாழை ஜெல் எடுத்து, அதை வைத்து கருவளையத்தின் மீது ஓரிரு நிமிடங்கள் மசாஜ் செய்யவும். இரவு தூங்கும் முன்பாக இதை செய்துவிட்டு அப்படியே தூங்கி விடலாம். காலையில் எழுந்த பிறகு இதை சுத்தம் செய்து கொள்ளலாம். தினசரி கற்றாழை பயன்படுத்துவதால் சருமத்திற்கு நீர்ச்சத்து கிடைக்கும். கருவளையம் வலுவிழக்க தொடங்கும்.
எலுமிச்சை சாறு : விட்டமின் சி சத்து நிறைந்த எலுமிச்சை சாறு எடுத்து, கருவளையத்தை சுற்றியிலும் மசாஜ் செய்தால், நமது சருமத்திற்கு புத்துணர்ச்சி கிடைக்கும். எலுமிச்சை சாறு பயன்படுத்துவதால் கருவளையத்தின் அடர்த்தி குறையத் தொடங்கும். வாரத்திற்கு இரண்டு முறை இதைப் பயன்படுத்துவதன் மூலமாக நல்ல பலன்களைப் பெறலாம். அடிக்கடி எலுமிச்சை சாறு பயன்படுத்தக் கூடாது. அது எரிச்சலை ஏற்படுத்தக் கூடும்.