திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் திருக்கோவிலில் நள்ளிரவில் நடைபெற்ற பள்ளிவேட்டை (படங்கள்)
Thiruvattar Adikesava Perumal temple : கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் திருக்கோவிலில் நள்ளிரவில் நடைபெற்ற பள்ளிவேட்டையில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
|
1/ 6
மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற ஆலயங்களுள் ஒன்றானது திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் திருக்கோவிலில் 108 வைணவ திருத்தலங்களுள் 76வது தலம்.
2/ 6
இந்த திருக்கோவிலில் 418ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 6ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதையடுத்து கடந்த 9ஆம் தேதி கொடிமரப் பிரதிஷ்டை நடைபெற்றது.
3/ 6
திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியதை இதையடுத்து விழாவின் முக்கிய நிகழ்வான பள்ளிவேட்டை நள்ளிரவில் நடைபெற்றது.
4/ 6
கருட வாகனத்தில் ஆலயத்தின் மேற்கு வாசல் வழியாக வெளியே எழுத்தருளிய ஆதிகேசவ பொருமாள் சாமி விக்ரகங்கள் ஆலயத்தில் அருகே அரசமரத்தடி வினாயகர் கோவிலின் முன்பு திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பள்ளிவேட்டை நடைபெற்றது.
5/ 6
இதில், அம்பு எய்தி வேட்டை செய்யும் நிகழ்வு நடைபெற்றது. அதைதொடர்ந்து மீண்டும் கிழக்கு வாசல் வழியாக சாமி விக்ரகங்கள் மீண்டும் ஆலயத்தினுள் கொண்டு செல்லப்பட்டது.
6/ 6
நள்ளிரவு 12மணிக்கு நடைபெற்ற பள்ளிவேட்டை நிகழ்ச்சியில் திரளாக பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.