முகப்பு » புகைப்பட செய்தி » காஞ்சிபுரம் » காஞ்சிபுரத்தில் சீனப்பயணி யுவான் சுவாங் சிற்பம்.. எப்படி வந்தது.. எந்த கோவிலில் இருக்கிறது தெரியுமா?

காஞ்சிபுரத்தில் சீனப்பயணி யுவான் சுவாங் சிற்பம்.. எப்படி வந்தது.. எந்த கோவிலில் இருக்கிறது தெரியுமா?

Kancheepuram Temple | காஞ்சிபுரத்தில் இருக்கும் கோவில் ஒன்றில் வரலாற்று சிறப்புமிக்க சீனப்பயணி யுவான் சுவாங்கின் சிற்பம் வடிவமைக்கப்படடுள்ளது. இந்த சிற்பம் எந்த கோவிலில் இருக்கிறது என்றும், அதன் சிறப்புகளையும் தெரிந்துகொள்வோம்.

  • 110

    காஞ்சிபுரத்தில் சீனப்பயணி யுவான் சுவாங் சிற்பம்.. எப்படி வந்தது.. எந்த கோவிலில் இருக்கிறது தெரியுமா?

    மாநகர் பகுதியில் அமைந்துள்ள வைகுண்ட பெருமாள் கோவில், பல்லவ மன்னன் நந்திவர்மனால், 7ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகும். விஷ்ணுவுக்காக எழுப்பப்பட்டுள்ள இக்கோயிலின் மூலஸ்தானம் மூன்று தனிப்பட்ட அடுக்குகளை கொண்டுள்ளது.

    MORE
    GALLERIES

  • 210

    காஞ்சிபுரத்தில் சீனப்பயணி யுவான் சுவாங் சிற்பம்.. எப்படி வந்தது.. எந்த கோவிலில் இருக்கிறது தெரியுமா?

    சிறப்புமிக்க மணற்கற்களால் கட்டப்பட்டு, வரலாற்று சிறப்புமிக்க வேலைப்பாடுகளோடு அமைந்த இந்த கோவிலில், நின்ற, அமர்ந்த மற்றும் படுத்த கோலங்களில் திருமாலின் திருவுருவச் சிலைகள் காட்சியளிக்கின்றன. இந்த கோவில் வரலாற்று சிறப்பு மிக்க அம்சங்களை தன்னகத்தே கொண்டு விளங்குகிறது.

    MORE
    GALLERIES

  • 310

    காஞ்சிபுரத்தில் சீனப்பயணி யுவான் சுவாங் சிற்பம்.. எப்படி வந்தது.. எந்த கோவிலில் இருக்கிறது தெரியுமா?

    இந்த கோவிலின் உட்புற சுவர்களில். மிகவும் நேர்த்தியாக சாளுக்கியருக்கும், பல்லவர்களுக்கும் நடைபெற்ற போர் பற்றிய குறிப்புகளும், போர் காட்சி சிற்பங்களும் செதுக்கப்பட்டுள்ளன. இந்த போர் காட்சிகளில் குதிகைள், யானைகள், வீரர்கள், அவர்களின் வீரம் போன்றவை அழகாய் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது.

    MORE
    GALLERIES

  • 410

    காஞ்சிபுரத்தில் சீனப்பயணி யுவான் சுவாங் சிற்பம்.. எப்படி வந்தது.. எந்த கோவிலில் இருக்கிறது தெரியுமா?

    இந்த கோவிலில் கட்டங்கட்டி சுவற்றில் அமைக்கப்பட்டிருக்கும் சிறபங்கள் ஒவவொன்றும் பல்வேறு கதைகளை சொல்லும் தன்மை வாய்ந்தவை. ஒருபுறம் இறைவனின் சிறப்புகளையும், அரிய செயல்களையும் எடுத்துக்காட்டுகின்றன.

    MORE
    GALLERIES

  • 510

    காஞ்சிபுரத்தில் சீனப்பயணி யுவான் சுவாங் சிற்பம்.. எப்படி வந்தது.. எந்த கோவிலில் இருக்கிறது தெரியுமா?

    நடனம், இசை, கலை நிகழ்ச்சிகள் என ஒருபுறம் கலச்சார நிகழ்ச்சிகளை தத்ரூபமாக எடுத்துக்காட்டுகின்றன. போர் வீரர்களையும், போர்காட்சிகளையும் கண்முன்னே நிறுத்துகின்றன.

    MORE
    GALLERIES

  • 610

    காஞ்சிபுரத்தில் சீனப்பயணி யுவான் சுவாங் சிற்பம்.. எப்படி வந்தது.. எந்த கோவிலில் இருக்கிறது தெரியுமா?

    அதேபோல, வடக்கு சுவற்றில், சமணர்களை கழுவிலேற்றிய சிற்பத்தை பார்க்கலாம். இரு சிறப்ம் நேராகவும், மற்றொரு சிற்பம் தலைகீழாகவும் இருக்கும். இதேபோல கோவிலின் நான்கு சுவர்களிலும் ஏராளமான சிற்பங்கள் பல்வேறு கதைகளை சொல்லி வருகின்றன.

    MORE
    GALLERIES

  • 710

    காஞ்சிபுரத்தில் சீனப்பயணி யுவான் சுவாங் சிற்பம்.. எப்படி வந்தது.. எந்த கோவிலில் இருக்கிறது தெரியுமா?

    அந்த வரிசையில் வியக்கத்தக்க சிற்பம் ஒன்று இருக்கிறது. அது சீனாவின் மதகுருவும், கல்வியாளரும், போற்றுதலுக்கு உரிய பயணியும், மொழிபெயர்ப்பாளருமான யுவான் சுவாங்கின் சிற்பம். இவர் சீனாவில் இருந்து பல்லவர் காலத்தில் காஞ்சிக்கு வந்து சென்றவர். இவரது பயணம் சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் பல்வேறு தொடர்புகளை ஏற்படுத்தின.

    MORE
    GALLERIES

  • 810

    காஞ்சிபுரத்தில் சீனப்பயணி யுவான் சுவாங் சிற்பம்.. எப்படி வந்தது.. எந்த கோவிலில் இருக்கிறது தெரியுமா?

    வைகுந்தப் பெருமாள் கோவிலின் தென் கிழக்கு சுவற்றில் சுவான்சாங் என்று அழைக்கப்படும் யுவான் சுவாங்கின் சிற்பத்தை பார்க்க முடியும். வரலாற்று சிறப்புமிக்க இந்த சிற்பம் யுவான் சுவாங்கின் சிறப்ம்தான் என்று ஆய்வாளர்கள் எடுத்துக்கூறுகின்றனர். அவரின் வருகையையும், சீனாவுடனான உறவையும் போற்றும் வகையில், பல்லவர்களால் அமைக்கப்பட்டுள்ளது.

    MORE
    GALLERIES

  • 910

    காஞ்சிபுரத்தில் சீனப்பயணி யுவான் சுவாங் சிற்பம்.. எப்படி வந்தது.. எந்த கோவிலில் இருக்கிறது தெரியுமா?

    கோவின் தூண்கள் ஒவ்வொன்றிலும் வேவ்வேறு சிற்பங்கள் செதுக்கப்பட்டு, ஒவ்வொரு தூணும் தனிச்சிறப்புடன் திகழ்கின்றது. கோயிலின் நடைபாதைகள் யாவற்றையும், அமர்ந்த சிங்கத்தின் சிலை செதுக்கப்பட்டுள்ள தூண்கள் தாங்கிப் பிடிக்கின்றன.

    MORE
    GALLERIES

  • 1010

    காஞ்சிபுரத்தில் சீனப்பயணி யுவான் சுவாங் சிற்பம்.. எப்படி வந்தது.. எந்த கோவிலில் இருக்கிறது தெரியுமா?

    இக்கோயிலின் கட்டுமானம் வரலாற்றுச் சிறப்புடன் காட்சியளிக்கின்றன. இந்த கோவிலுக்கு வருபவர்கள் கோவிலின் கருவறையை மட்டும் பார்த்துவிட்டு திரும்பாமல், சுவர்களில் செதுக்கப்பட்டுள்ள சிற்பங்களையும், அவை கூறும் கதைகளையும் தெரிந்து கொள்வது அவசியம். இந்த சிற்பங்களை பார்த்து வியந்து அறிய ஒருநாள் போதாது.

    MORE
    GALLERIES