முகப்பு » புகைப்பட செய்தி » காஞ்சிபுரம் » சத்து நிறைந்த காஞ்சிபுரம் கோவில் இட்லி சாப்டிருக்கீங்களா? - அடேங்கப்பா... இதற்கு இத்தனை சிறப்புகளா!?

சத்து நிறைந்த காஞ்சிபுரம் கோவில் இட்லி சாப்டிருக்கீங்களா? - அடேங்கப்பா... இதற்கு இத்தனை சிறப்புகளா!?

Kanchipuram Kovil Idli | கோவில் இட்லி என்று அழைக்கப்படும் காஞ்சிபுரம் இட்லி பிரசித்தி பெற்ற ஒன்றாகும். மிளகாய் சேர்க்காமல், மிளகை மட்டுமே சேர்த்து தாயாரிக்கப்படும் இந்த இட்லி சிறப்பும் சத்தும் நிறைந்ததாகும்.

  • 17

    சத்து நிறைந்த காஞ்சிபுரம் கோவில் இட்லி சாப்டிருக்கீங்களா? - அடேங்கப்பா... இதற்கு இத்தனை சிறப்புகளா!?

    வரதராஜ பெருமாள் கோவிலில், பெருமாளுக்கு படைக்கப்படும் ‘காஞ்சிபுரம் இட்லி’ பிரசித்தி பெற்ற ஒன்றாகும். மிளகாய் சேர்க்காமல், மிளகை மட்டுமே சேர்த்து தாயாரிக்கப்படும் இரண்டு இட்லி பெருமாளுக்கு படைக்கப்படுகிறது.

    MORE
    GALLERIES

  • 27

    சத்து நிறைந்த காஞ்சிபுரம் கோவில் இட்லி சாப்டிருக்கீங்களா? - அடேங்கப்பா... இதற்கு இத்தனை சிறப்புகளா!?

    இவ்வாறு படைக்கப்படும் இட்லியில் ஒன்று, கோவில் கைங்கர்யம் செய்பவர்களுக்கும், மற்றொரு இட்லி கட்டளைதாரருக்கும் கொடுக்கப்படுவது வழக்கம். கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு தோசையும் வடையும் பிரசாதமாகக் கொடுக்கப்படுகின்றன.

    MORE
    GALLERIES

  • 37

    சத்து நிறைந்த காஞ்சிபுரம் கோவில் இட்லி சாப்டிருக்கீங்களா? - அடேங்கப்பா... இதற்கு இத்தனை சிறப்புகளா!?

    சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த வல்லபாச்சார்யர் என்பவர் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாளுக்கு, முதன் முதலில் இட்லி படைத்தவர் என்று சொல்லப்படுகிறது. அவர்தான் பெருமாளுக்கு மிளகும் சுக்கும் சேர்த்த இட்லியை மந்தாரை இலையில் படைத்தாராம். அன்று முதல் இந்தப் பழக்கம் தொடர்ந்து வருவதாக சொல்லப்படுகிறது. சுவையும் சத்தும் நிறைந்த இந்த காஞ்சிபுரம் இல்லியை பலரும் விரும்வி சாப்பிடுகின்றனர்.

    MORE
    GALLERIES

  • 47

    சத்து நிறைந்த காஞ்சிபுரம் கோவில் இட்லி சாப்டிருக்கீங்களா? - அடேங்கப்பா... இதற்கு இத்தனை சிறப்புகளா!?

    காஞ்சிபுரம் இட்லி செய்முறை: முதலில் பச்சரிசி, தோல் நீக்கிய உளுந்து, வெந்தயம் ஆகியவற்றை சுமார் மூன்று மணி நேரம் ஊறவைக்க வேண்டும். நக்கு ஊறிய பின்னர், அத்துடன் தயிர் சேர்த்து அரைக்க வேண்டும். அரைத்த மாவுடன் மிளகு, சீரகம், சுக்கு, தேவையான அளவு உப்பு மற்றும் நெய் சேர்த்து 7 ஏழு மணி நேரம் புளிக்கவைக்க வேண்டும்.

    MORE
    GALLERIES

  • 57

    சத்து நிறைந்த காஞ்சிபுரம் கோவில் இட்லி சாப்டிருக்கீங்களா? - அடேங்கப்பா... இதற்கு இத்தனை சிறப்புகளா!?

    பின்னர், மந்தாரை இலையில் மூங்கில் குடலையில் இட்டு அதில் ஊற்றிக்கொள்ள வேண்டும். பின்னர், சுமார் மூன்று மணி நேரம் வேகவைக்க வேண்டும். வெந்த பின்னர் பார்ப்பதற்கு இது, வெள்ளை நிறத்தில், பெரிய சைஸ் குழவிக் கல் அளவிற்கு இருக்கும். பின்னர் துண்டு துண்டாக வெட்டி பரிமாறப்படுகிபறது. இதனுடன் கொடுக்கப்படும் இட்லிபொடியுடன் சாப்பிடும்போது அதன் சுவையும் மணமும் ஆளையே மக்கும்.

    MORE
    GALLERIES

  • 67

    சத்து நிறைந்த காஞ்சிபுரம் கோவில் இட்லி சாப்டிருக்கீங்களா? - அடேங்கப்பா... இதற்கு இத்தனை சிறப்புகளா!?

    காலை உணவை வித்தியாசமாகவும் சத்தாகவும் சாப்பிட விரும்புபவர்கள் நிச்சயம் உங்கள் வீட்டில் இந்த காஞ்சிபுரம் இட்லியை செய்து பாருங்கள். பிறகு அதன் சுவையும் மணமும் உங்களை அடிக்கடி செய்யவைக்கும். வீட்டில் இட்லி பாத்திரத்தில் வேகவைத்தால் குறைந்தது அரை மணிநேரம் வேகவைக்க வேண்டும்.

    MORE
    GALLERIES

  • 77

    சத்து நிறைந்த காஞ்சிபுரம் கோவில் இட்லி சாப்டிருக்கீங்களா? - அடேங்கப்பா... இதற்கு இத்தனை சிறப்புகளா!?

    பாரம்பரியம் மிக்க இந்த ‘காஞ்சிபுரம் இட்லியின் சுவைக்கு எதுவும் ஈடாகாது’ என்று மூத்தவர்கள் சொல்வது வழக்கம். இந்த ‘கோவில் இட்லி’ சுவைக்காக மட்டும் அல்லாமல் சத்து நிறைந்த ஆரோக்கியத்திற்காகவும் சாப்பிடலாம்.

    MORE
    GALLERIES