வகான்ஷியோ கப்பலில் பெரிய விரிசல்கள் ஏற்பட்டு, இந்தியப் பெருங்கடலில் டன் கணக்கில் டீசல் மற்றும் எண்ணெயை கசிந்து வருவதால், மொரீஷியஸ் தீவு மிகப்பெரிய சுற்றுச்சூழல் அவசரநிலையை எதிர்கொண்டிருந்தது. டன் கணக்கிலான எண்ணெய் கடலுடன் கலந்தாலும், தொடர்ச்சியான சுத்தம் செய்யும் பணிகள் நடக்கின்றன. இந்தியா மொரீசியஸுக்கு அனுப்பிய உதவிகளை பார்ப்போம். படங்கள்: AFP
மொரீசியஸ் அரசின் கோரிக்கைக்கு இணங்க, இந்திய விமானப் படையின் சி17 க்ளோப் மாஸ்டர் விமானத்தில் உதவிகள் அனுப்பி வைக்கப்பட்டன. Ocean Booms, River Booms, Disc Skimmers, Heli Skimmers, Power packs, Inflators, Blowers, Salvage barge மற்றும் 10000 oil absorbent pads ஆகியவை அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. படங்கள்: AFP