முகப்பு » புகைப்பட செய்தி » உலகம் » பணம் கொடுத்து மகிழ்ச்சியை விலைக்கு வாங்க முடியுமா..? முடியுமாம்

பணம் கொடுத்து மகிழ்ச்சியை விலைக்கு வாங்க முடியுமா..? முடியுமாம்

எவ்வளவு பணம் கொடுத்தாலும் சந்தோசத்தை விலைக்கு வாங்க முடியாது என்றுதான் இதுவரை தத்துவம் பேசி வந்திருக்கிறோம். அந்த தத்துவத்தை தவிடு பொடியாக்கி இருக்கிறது அமெரிக்காவில் ஒரு ஆய்வு முடிவு. பணம் கொடுத்து மகிழ்ச்சியை வாங்க முடியும் என்று ஆய்வில் தெரிய வந்திருக்கிறதாம்.

  • 16

    பணம் கொடுத்து மகிழ்ச்சியை விலைக்கு வாங்க முடியுமா..? முடியுமாம்

    பணம் பத்தும் செய்யும், பாதாளம் வரை பாயும். இப்படி பணம் குறித்த அனுமானங்கள் ஏராளம். அதே போல் பணம் குறித்து எதிர்மறையான தத்துவங்களும் இங்கே வெகு பிரபலம். அதில் ஒன்று தான். பணம் கொடுத்தாலும் வாங்க முடியாத ஒன்று மகிழ்ச்சி. அப்படித் தான் தத்துவமேதைகளும், அறிஞர்களும் கூறிவந்தார்கள். ஏன் சாமானியார்கள் கூட இது தொடர்பாக விவாதித்ததுண்டு. ஆனால் சமீபத்திய ஆய்வு ஒன்று பணம் இருந்தால் மகிழ்ச்சியை வாங்க முடியும் என்ற உண்மையை வெளிக்கொண்டு வந்திருக்கிறது.

    MORE
    GALLERIES

  • 26

    பணம் கொடுத்து மகிழ்ச்சியை விலைக்கு வாங்க முடியுமா..? முடியுமாம்

    அமெரிக்காவில் டேனியல் கேனமென் மற்றும் மேத்யூ கில்லிங்ஸ்வொர்த் என்ற இரண்டு ஆராய்ச்சியாளர்கள் நடத்திய கள ஆய்வு ஒன்று தான் காலம் காலமாக இருந்து வந்த ஒரு சித்தாந்தத்தை பொய்யாக்கி இருக்கிறது. இவர்கள் நடத்திய ஆய்வுப் படி அதிகமாக சம்பாதிக்கும் நபர்கள் மகிழ்சியாகவே இருக்கிறார்களாம். அமெரிக்காவில் 18 முதல் 65 வயது வரை உள்ள சுமார் 33,391 நபர்களிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. அவர்களில் பெரும்பாலானோரின் ஆண்டு வருமானம் கிட்டத்தட்ட இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 60 லட்சம் ரூபாய்.

    MORE
    GALLERIES

  • 36

    பணம் கொடுத்து மகிழ்ச்சியை விலைக்கு வாங்க முடியுமா..? முடியுமாம்

    இந்த ஆய்வு நடத்துவதற்காக Track Your Happiness என்ற செயலி ஒன்றை அறிமுகம் செய்து அதன் வழியாக கேள்விகளை கேட்டு முடிவுகளை எடுத்திருக்கிறார்கள். இந்த ஆய்வின் படி அதிக பணம் சம்பாதிப்பவர்கள் அதிக சந்தோசமாக இருக்கிறார்களாம். ஆனால் இந்த ஆய்வுக்குட்படுத்தப்பட்டவர்களில் 20 விழுக்காடு பேருக்கு எவ்வளவு பணம் சம்பாதித்தாலும் மகிழ்ச்சி கிடைக்கவில்லையாம்.

    MORE
    GALLERIES

  • 46

    பணம் கொடுத்து மகிழ்ச்சியை விலைக்கு வாங்க முடியுமா..? முடியுமாம்

    இன்னும் சிலர் பணம் எவ்வளவு தான் கையில் இருந்தாலும் மருத்துவ ரீதியான மன உளைச்சல் ஏற்படும் போது, அதில் இருந்து மீண்டு மகிழ்ச்சியாக இருக்க முடிவதில்லை என்றும் பதில் சொல்லியிருக்கிறார்கள். முக்கியமாக இந்த ஆய்வு முடிவில் இரண்டு விசயங்களை தெளிவு படுத்தியிருக்கிறார்கள்.

    MORE
    GALLERIES

  • 56

    பணம் கொடுத்து மகிழ்ச்சியை விலைக்கு வாங்க முடியுமா..? முடியுமாம்

    ஒன்று, பெரும்பாலானவர்களுக்கு மகிழ்ச்சி என்பது அவர்கள் சம்பாதிக்கும் பணத்தை பொறுத்து அமைகிறது என்பது. மற்றொன்று உணர்வு ரீதியான இடர்பாட்டில் இருப்பவர்களுக்கு பணம் எந்த வகையிலும் உதவாது என்பது. பணமும் உணர்வுரீதியான மன நிறைவும் வேறு வேறு துருவங்களாகவே இருக்கிறது என்பதையும் இந்த ஆய்வு மூலம் தெளிவுபடுத்தியிருக்கிறார்கள்.

    MORE
    GALLERIES

  • 66

    பணம் கொடுத்து மகிழ்ச்சியை விலைக்கு வாங்க முடியுமா..? முடியுமாம்

    தனி மனித வருவாய் ஒருவரின் மகிழ்ச்சியின் அளவு கோல் என்றாலும், அவர்களின் உணர்வுரீதியான அனுகுமுறை பணத்தால் கிடைக்கும் சந்தோசத்தையும், மகிழ்ச்சியையும் பாதிக்கிறது என்பதும் இந்த கள ஆண்வு மூலம் தெளிபடுத்தப்பட்டிருக்கிறது. பணம் பந்தியிலே.. குணம் குப்பையிலே என்ற பாடல் வரிகள் நினைவு படுத்துவது இது தானோ?

    MORE
    GALLERIES