

தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் 18-ம் தேதி மக்களவை தேர்தல் மற்றும் 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.


மக்களவை மற்றும் சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் மார்ச் 19 தொடங்கி, 26-ம் தேதி வரை நடைபெற உள்ளது. மார்ச் 27-ம் தேதி வேட்புமனு பரிசீலனை நடைபெறுகிறது. வேட்புமனுவைத் திரும்பப் பெற மார்ச் 29-ம் தேதி கடைசி நாள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வேட்பு மனு தாக்கல் செய்வது எப்படி? என்று இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்.


விண்ணப்பம்: மக்களவை தேர்தலில் போட்டியிடப் படிவம் 2A-ஐ பூர்த்திச் செய்து சமர்ப்பிக்க வேண்டும். சட்டமன்ற தேர்தல் எனில் படிவம் 2B-ஐ பூர்த்திச் செய்து சமர்ப்பிக்க வேண்டும்.


விண்ணப்பம்: மக்களவை தேர்தலில் போட்டியிடப் படிவம் 2A-ஐ பூர்த்திச் செய்து சமர்ப்பிக்க வேண்டும். சட்டமன்ற தேர்தல் எனில் படிவம் 2B-ஐ பூர்த்திச் செய்து சமர்ப்பிக்க வேண்டும்.


வாக்குமூலம்: வேட்பு மனு தக்கல் செய்யும் போது படிவம் 26-கீழ் தன் மீது உள்ள வழக்குகள் விவரங்கள், பான் எண், சொத்து விவரங்கள், கடன், தொழில், கல்வித் தகுதி போன்ற விவரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.


மேலும் மின்சாரக் கட்டணம், குடிநீர் கட்டணம், தொலைபேசி கட்டணம் போன்றவற்றைச் சரியாகச் செலுத்தி வருவதற்கான ஆவணங்கள், 10 வருடங்களுக்கும் மேலாக இந்தியாவில் வசித்து வருதற்கான சான்றிதழ் போன்றவற்றையும் சமர்ப்பிக்க வேண்டும்.


அரசியல் கட்சிக்குக் கீழ் நிற்கும் வேட்பாளர்கள் படிவம் A மற்றும் படிவம் B-ஐ வேட்பு மனுவுடன் சேர்த்துச் சமர்ப்பிக்க வேண்டும்.


மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் 25,000 ரூபாயும், சட்ட மன்றத் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் 10,000 ரூபாயும் தேர்தல் டெபாசிட் செய்ய வேண்டும். இதுவே எஸ்சி, எஸ்டி என்றால் இந்தக் கட்டணத்தில் 50 சதவீதம் டெபாசிட் செய்தால் போதும். வேட்பு மனுத் தாக்கல் செய்யும் போது டெபாசிட் தொகைக்கான டிமாண்ட் டிராஃப்ட்டையும் இணைக்க வேண்டும்.


உறுதிமொழி: மேலே கூறிய விவரங்கள் அனைத்தும் சரியானவை என்பதற்கான உறுதியை அளிக்கிறேன் என்று குறிப்பிட்டுக் கையெழுத்திட வேண்டும்.


வேட்புமனுத் தாக்கல் செய்பவருக்கு 3 வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்றும், உடன் வர 4 பேருக்கு மட்டுமே அனுமதிக்க வழங்கப்படும். தினசரி காலை 11 மணி முதல் மாலை 3 மணிக்குள் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ய முடியும். விடுமுறை நாட்களில் வேட்பு மனுத் தாக்கல் செய்ய முடியாது.


வேட்பு மனுவைத் தாக்கல் செய்த பிறகு அதற்கான ஒப்புகை படிவம் 6, தேர்தல் நடத்தை விதி படிவம் 9, தேர்தலில் எவ்வளவு செலவு செய்யலாம் என்ற விவரங்கள் போன்றவற்றை வேட்பாளர்களைத் தேர்தல் அதிகாரியிடமிருந்து பெற்றுக்கொள்ள வேண்டும். மேலும் வேட்பாளர் தங்களது மாதிரி கையொப்பத்தையும் சமர்ப்பிக்க வேண்டும்.