ராதிகா தயாரித்து முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் சீரியலில் பிரபல இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார். நடிகை ராதிகா சரத்குமார், சின்னத்திரையில் விரைவில் ஒரு புதிய சீரியலை தொடங்கவுள்ளார். இரண்டு மகள்களுக்கு அம்மாவாக முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார் ராதிகா. பிரபல இயக்குநரும், நடிகர் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர், இந்த சீரியலில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கிழக்கு வாசல் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த சீரியலை ராதிகா சரத்குமாரின் ராடன் மீடியா நிறுவனம் தயாரிக்கிறது. பூவே பூச்சூடவா சீரியல் மூலம் பிரபலமான ரேஷ்மா முரளிதரனும் இந்த சீரியலில் நடிக்கிறார். கிழக்கு வாசல் சீரியல் விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.