செய்தி வாசிப்பாளர் கண்மணி நவீனுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதயத்தை திருடாதே சீரியல் மூலம் ரசிகர்களின் உள்ளம் கவர்ந்த நவீனும், நியூஸ் ரீடர் கண்மணியும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துக் கொண்டனர். இவர்கள் இருவரும் ஒன்றாக சேர்ந்து நடிக்கவில்லை. சின்னத்திரையில் வெவ்வேறு சேனல்களில் பணியாற்றினார்கள். இதயத்தை திருடாதே சீரியல் மூலம் பிரபலம் ஆனவர் நவீன். அதே போல் சீரியல் நடிகைகளின் அளவுக்கு டெலிவிஷனில் பிரபலமானவர் செய்தி வாசிப்பாளர் கண்மணி. கண்மணியின் க்யூட்டான முகமும், தெளிவான தமிழ் உச்சரிப்பும் ஏராளமானோரை கவர்ந்திழுந்துள்ளது. கடந்த வருடம் இவர்கள் திருமணம் செய்துக் கொண்ட நிலையில், தாங்கள் விரைவில் பெற்றோராகப் போவதை சமீபத்தில் அறிவித்திருந்தனர். அதோடு கண்மணியின் வளைகாப்பு படங்கள் இணையத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில் தற்போது நவீன் கண்மணி தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து அவர்களுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.