பின்னர் தான் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தையும் பகிர்ந்துக் கொண்டார் திவ்யா. அதோடு தனது கணவர் அர்னாவ் அவருடன் செல்லம்மா சீரியலில் நடிக்கும் அன்ஷிதா என்பவருடன் நெருக்கமாகி, தன்னை தவிர்ப்பதாகவும், கர்ப்பமாக இருக்கும் தன்னை கொடுமைப்படுத்துவதாகவும் வீடியோ ஒன்றையும் வெளியிட்டார். இதையடுத்து அர்னாவ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் தற்போது இணையதளம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ள அர்னாவ், ”ஊரில் உள்ள பல குழந்தைகளை நான் தூக்கி வைத்து விளையாடுவேன். ஆனால் இப்போது என்னுடைய குழந்தையை தூக்க முடியாமல் இருக்கிறேன். நேரில் சென்று பார்ப்பதில் நிறைய சட்ட சிக்கல்கள் இருக்கின்றன. தவிர, அதற்கு திவ்யா எப்படி ரியாக்ட் செய்வார் என்றும் தெரியவில்லை. அதனால் குழந்தையை வீடியோ காலிலாவது தனக்குக் காட்ட வேண்டும்” என கண்ணீருடன் தெரிவித்திருக்கிறார்.